districts

img

செயலற்றிருக்கும் நலவாரியத்தை முறைப்படுத்த கோரி மீன் தொழிலாளர் சங்கம் கையெழுத்து இயக்கம்

நாகர்கோவில், ஜன.20- கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் துறை ஊராட்சியில் கன்னியாகுமரி மீன் தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் மீன வர்களுக்கு எந்த விதத்திலும் உப யோகமற்று இருக்கும் நலவாரி யத்தை செயல்படுத்த கோரி கை யெழுத்து இயக்கம் நடைபெற் றது.  2011 தொடங்கி இன்றுவரை செயல்படாமல் இருக்கும் மீனவர் நலவாரியம் செயல்பட கமிட்டி அமைக்கப்பட வேண்டும், நல வாரியத்தில் விண்ணப்பித்தவர் களுக்கு வாரிய அட்டை கிடைக் காமல் ஆண்டு கணக்கில் காத்தி ருக்கும் நிலைமையை மாற்ற வேண்டும், மேலும் கல்வி உத வித்தொகை, பிரசவகாலநிதி, இயற்கை மரணம், விபத்து மரண நிதி போன்றவைகள் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர் நலவாரி யத்தை தமிழக மீனவர்களின் சமூக நலபாதுகாப்பு திட்டமாக செயல்படுத்துவதற்கு தனி அலு வலர், ஊழியர்கள், தனி அலு வலகம் அமைத்து தமிழ்நாடு உட லுழைப்புத் தொழிலாளர் வாரி யங்கள் ,தொழிலாளர் துறையின்  வழி செயல்படுவதுபோல் செயல் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம் நடை பெற்றது  இந்நிகழ்விற்கு சங்கத்தின் பள்ளம் கிளை உறுப்பினர் ரீகன் தலைமை வகித்தார், சங்கத்தின் மாநில பொது செயலாளர் எஸ். அந்தோணி கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சகாய பாபு, சங்க நிர்வாகிகள் ஆண்டனி, மரிய ஜேம்ஸ், ஜெரோம், அமிர் தம், வழக்குரைஞர்கள் அருள் ராஜ், மரியா ஸ்டீபன், உள்ளிட்ட ஏராளமான மீன் தொழிலாளர் கலந்து கொண்டனர்.