districts

பட்டாசு ஆலை வெடி விபத்து : 4 பேர் பலி

சென்னை, ஜன.5- விருதுநகர் பட்டாசு ஆலை வெடி  விபத்தில் உயிரிழந்தவர்கள், படுகாய மடைந்தவர்களுக்கு நிவாரண நிதியு தவியை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமம்  உள்ளது. இங்கு கருப்பசாமி என்ப வருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை  உள்ளது. புதனன்று(ஜன.5) காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டி ருந்தபோது, எதிர்பாராத விதமாக வெடி மருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்த  இரண்டு அறைகள் இடிந்து விழுந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆலை உரிமையாளர் கருப்பசாமி, ஊழியர் செந்தில்குமார் உள்ளிட்ட மூவர்  உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் வெடி விபத்தில்  உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தவர்க ளுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். அதில் “விருதுநகர் மாவட்டம், வெம்பக்  கோட்டை வட்டம், வையம்பட்டி கிராமத் திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்த மடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்ப த்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண மாக தலா ரூ.3 லட்சமும், காயமடைந்த வர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியி லிருந்து உடனடியாக வழங்கிட உத்தர விட்டுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.