நத்தம், பிப்.5- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கர்ணம் தெருவை சேர்ந்த வர் பொன்னழகப்பன். இவரது மகன் குருபா. இவர் நத்தம் ராம்சன்ஸ் பிரைமரி பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி விபத்தில் சிக்கி குருபா பலியானான். ராம்சன்ஸ் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து இறந்த மாணவன் குடும்பத்திற்கு நேஷனல் இன்சூ ரன்ஸ் கம்பெனி சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் ராமசாமி தலைமை தாங்கி னார்.இன்சூரன்ஸ் கம்பெனி மண்டல முதன்மை கோட்ட மேலாளர் கார்த்திகேயன் மாணவனின் பெற்றோரிடம் 1 லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார். இதில் முதுநிலை உதவியாளர் கௌதம், முகவர் வீரபாண்டி மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.