districts

மதுரை முக்கிய செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்தவர்களை பிடித்த பொதுமக்கள் 

சின்னாளபட்டி, ஜூன் 4- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ஆர்கேஎஸ் தெருவைச் சேர்ந்தவர் ரவி என்பவரது மனைவி பாக்கிய லெட்சுமி (47). சம்பவத்தன்று பாக்கியலெட்சுமி வெளியில்  நின்றுக் கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்த இருவர் பாக்கிய லெட்சுமி கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை அறுத்துக் கொண்டு செல்லும் போது தடுமாறி விழுந்தனர். அவர்  களை பொதுமக்கள் பிடித்து அடித்தனர். தங்கச்சங்கிலி யை கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சின்னாளப்பட்டி காவல் சார்பு ஆய்வா ளர் கோமதி இருவரிடம் விசாரித்தார. அப்போது அவர்கள்  நூர் முகமது (40), அக்பர் அலி (20) எனத் தெரிய வந்தது.  இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்ப வம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழகர்கோவில் ராக்காயி அம்மன்  கோவில் பணிகள் தொடக்கம்

மதுரை, ஜூன் 4- மதுரை மாவட்டம் அழகர்கோவிலின் உப கோவிலான ராக்காயி அம்மன் கோவில் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கையுடன் இணைந்து காணப்படுகிறது. இங்கு பல  ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி வேலைகள் தொடங்கி யது. இதனையொட்டி முதற்கட்ட பணியாக ஜூன் 4 அன்று  முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் வழக்கம்போல் நூபுர கங்கையில் நீராடலாம். ஆனால்  ராக்காயி அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்ய அனு மதிக்கப்படவில்லை. மேற்படி பூஜைகள் நிறைவுற்ற பின்  வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்பட்டனர்.

ஆத்தூர் அணையில் மூழ்கி இருவர் பலி 

சின்னாளபட்டி, ஜூன் 4-  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பூஞ்சோலை பகுதியை  சேர்ந்தவர் செல்வக்குமார் ( 35). இவர் சித்த வைத்தியரா வார். இவரது அண்ணன் வேல்முருகன், இவரது மகள் தர்ஷிணி (15 ) மற்றும் சகோதரர்கள் முருகேசன், ராமன், செல்வக்குமாரின் மனைவி பூங்கொடி ஆகியோருடன் சனிக்கிழமையன்று ஆத்தூர் அணையில் குளிக்கச் சென்றனர். இதில் நீச்சல் தெரியாததால் செல்வக்குமார் மற்றும் தர்ஷிணி ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கி பலி யான இருவரின் உடல்களை மீட்டனர். விபத்து குறித்து  செம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நத்தம் பகுதியில் நாளை மின்தடை

நத்தம், ஜூன் 4- திண்டுக்கல் மாவட்டம், நத்தம் உப மின்நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜூன் 6 திங்கட்கிழமை யன்று நடைபெறுகிறது.இதனால் அன்று காலை 9 மணி  முதல் மதியம் 2 மணி வரை நத்தம்,கோவில்பட்டி, செல்லப்ப நாயக்கன்பட்டி,பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளி பட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியா மலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம்  மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சாணார்பட்டி அருகே பலசரக்கு கடையில் நகை, பணம் கொள்ளை

நத்தம், ஜூன் 4- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி அருகே அதிகாரிபட்டி கிராமத்தில் மனோகரன் என்பவர் திண்டுக்கல் - திருமலைக்கேணி சாலையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் வெள்ளியன்று இரவு கடையை  அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதன்பின்னர்  கொள்ளையர்கள் கடையின் ஒட்டை பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த 12 லட்சம் பணம், 30 பவுன் நகை களை கொள்ளையடித்துச் சென்றனர். சனிக்கிழமை யன்று அதிகாலை வழக்கம் போல் மனோகரன் கடையை  திறக்கச் சென்றார். அப்போது கடையின் ஓடுகள் பிரிக்கப்  பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கபட்டது தெரிய வந்தது. இது குறித்து சாணார்பட்டி காவல்நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள்  சோதனை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியரிடம் செல்போன் பறிப்பு

மதுரை, ஜூன் 4- மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள அரசு  டாஸ்மாக் கடையில் ராஜராஜன் என்பவர் விற்பனையாள ராக பணியாற்றி வருகிறார். இவர் பணியிலிருந்தபோது மது வாங்க வந்த 3 வாலிபர்கள் ராஜராஜனை மிரட்டி அவ ரது செல்போனை பறித்துவிட்டு தப்பிஓடினர்.  அங்குள்ள சி.சி.டி.வி.கேமரா மூலம் பார்த்ததில் பனையூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர், ராமு, ராஜபாண்டி  ஆகியோர செல்போனை பறித்தது தெரியவந்தது.

நரிக்குடி பகுதியில் நாளை மின் தடை

நரிக்குடி, ஜூன் 4- நரிக்குடி பகுதிகளில் நாளை ( ஜூன், 6) மின்தடை செய்யப்படும் என அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காரியாபட்டி, நரிக்குடி, முத்துராமலிங்கபுரம், பரளச்சி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதி களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  எனவே, நரிக்குடி, முத்துராமலிங்கபுரம், பரளச்சி மற்றும்  அதன்சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் 3 கொலைகள் 

திண்டுக்கல், ஜுன் 4- திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 கொலைச்  சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திண்டுக்கல் முருகபவ னத்தில் வெள்ளியன்று இரவு பிரபாகரன் என்ற இளைஞர்  கழுத்து அறுபட்ட நிலையில் கொலையுண்டு கிடந்தார். இதே போல் பழனி அருகே புளியமரத்து செட் பகுதியில்  சொத்து தகராறு காரணமாக மகேந்திரன் என்ற விவசாயி படு கொலை செய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக அவரது சகோதரரை போலீசார் தேடி  வருகிறார்கள். ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள கதிரை யன்குளம் பகுதியில் சிவா என்ற இளைஞர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார். (நநி)

கழிவு பட்டாசுகளை பற்ற வைத்தபோது  தீ விபத்து: தொழிலாளி படுகாயம்

சிவகாசி, ஜூன் 4- சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலைக் கழிவுகளை பற்ற வைத்த போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி படுகாய மடைந்தார். சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான ஸ்ரீநிதி பட்டாசு ஆலை உள்ளது. இங்கு, அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (62) என்பவர் வேலை செய்து வந்தார். இந்தநிலையில், வேலை முடிந்து வழக்கம் போல கழிவு  பட்டாசுகளை ஆலையின் வெளியே பற்ற வைத்துள்ளார். அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் கிருஷ்ண சாமியின் உடல் மீது தீப்பற்றியது. இதையடுத்து, சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, தனி யார் மருத்துமவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கிருஷணசாமி மனைவி ஜோதி கொடுத்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை அடித்துக்கொன்ற கணவன் கைது

 மதுரை, ஜூன் 4-  மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எல்.எல்.தெருவில் வசித்து வருபவர் சதீஷ்குமார், கட்டிடத்  தொழிலாளி. இவரது மனைவி சித்ரா தேவி. இருவரும்  குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளியன்று மனைவி மீது அவ தூறாக பேசியுள்ளார். அப்போது கணவன் - மனைவி இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது ஆத்திரமடைந்த கணவர் சதீஷ்குமார் அருகில் இருந்த கனமான பொருளால் மனைவி சித்ரா தேவி தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் சதிஷ்குமாரை கைது செய்தனர்.

தேனி அருகே இருபிரிவினர் மோதல்  போலீஸ் வாகனம் சிறைப்பிடிப்பு 

தேனி, ஜூன் 4- தேனி அருகே கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு, இரு பிரிவினரிடையே மோதலாக வெடித்தது. போலீஸ் வாகனம் சிறைப்பிடிக்கப்பட்டது. தேனி அருகே வடபுதுப்பட்டியில் முருகேசன் என்பவர்  தனது காரை சாலையில் நிறுத்தியுள்ளார். அதே தெருவை  சேர்ந்த ஈஸ்வரன் வேறு இடத்தில் நிறுத்தி வைக்கச் சொல்லி யுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மோதல்  ஏற்பட்டு, இரு பிரிவினரிடையே மோதலாக உருவெ டுத்தது. அப்போது விசாரணைக்கு வந்த தேனி அல்லிநக ரம் காவல் சார்பு ஆய்வாளரின் வாகனத்தை ஒரு பிரிவினர் 2 மணி நேரம் சிறைப்பிடித்தனர். ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முரு கேசன் மகள் கொடுத்த புகாரின் பேரில் செல்வகுமார் மீதும், போலீஸ் வாகன ஓட்டுநர் பிச்சைமுத்து கொடுத்த  புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து அல்லி நகரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் விழாவில் நகை மாயம்

காரியாபட்டி, ஜூன் 4- காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலி மாயமானது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள அரசகுளத்தைச் சேர்ந்தவர் வேலுமணி மனைவி மீனாட்சி(55). இவர் ஆவியூரில் உள்ள கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளார். விழா முடிந்தவுடன் பார்த்த போது, தான் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி மாயமானது தெரிய வந்தது. எனவே,  இதுகுறித்து ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து  செயினை திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர். 

காவல் சார்பு ஆய்வாளர் தாய் தற்கொலை

திருவில்லிபுத்தூர், ஜூன் 4- திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் மேலூரில் வசிப்பவர் சண்முகசுந்தரம் (வயது 51). இவர் ஆயுதப்படை யில் சார்பு ஆய்வாளராக உள்ளார். இவரது தாய் கந்தம் மாள் (வயது 74). இவர் அதே ஊரில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு வயிற்றில் கட்டி ஏற்பட்ட காரணத்தினால் அறுவை சிகிச்சை செய்து கட்டியை எடுத்தனர்.  இதிலிருந்து கந்தம்மாளுக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்ப வத்தன்று கந்தமாள் தனது வீட்டில் வைத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து அவரது மகன் சண்முக சுந்தரம் தந்த புகாரின் பேரில்  மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.