விருதுநகர், ஜூலை 18- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் தெற்கு ஒன்றிய மாநாடு ஆவுடையா புரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமமூர்த்தி தலைமை தாங்கி னார். சங்க கொடியை முதுபெரும் தலைவர் சங்கையா ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மா னத்தை முத்துராஜ் முன்மொழிந்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டப் பொருளாளர் மனோஜ்குமார் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.நேரு, விவசாயிகள் சங்கத் தலைவர் பி.பால்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் வி.முருகன் நிறைவுரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு : ஒன்றியத் தலைவராக பி.முனீஸ்வரி, செயலாளராக சேது ராமசாமி, பொருளாளராக செய்யதுமுகமது ஆகி யோர் உட்பட 16 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.