சிவகங்கை, ஜூன் 1-
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவரு மான பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரியும் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகள் மீது அடக்குமுறையை ஏவியதை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட் டம், திருப்புவனம், திருப்பத்தூரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
திருப்புவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றியத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் நீலமேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் வீரபாண்டி ஆகியோர் பேசினர். திருப்பத்தூரில் மாவட்டக்குழு உறுப்பி னர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் பாலு, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சண்முகப் பிரியா ஆகியோர் பேசினர்.