இன்றைய நிகழ்ச்சி
அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) ஐம்பதாவது ஆண்டு பொன்விழா நிகழ்வு “50 ஆண்டுகள் போராட்ட வரலாற்று கண்காட்சி”: மதுரை புறவழிச் சாலை அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு மே 27 மாலை 5 மணி. மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், சங்கத்தின் துணைப் பொதுச் செய லாளர் எஸ். மணிமாறன், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கே. பழனி வேலு, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். தெய்வ ராஜ் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன் பங்கேற்கின்றனர்.
விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு
மதுரை, மே 26- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மேற்கு ஒன்றிய மாநாடு பெரிய மகாலிங்கம், வி.முருகேசபாண்டி யன் நினைவரங்கத்தில் பரவையில் நடைபெற்றது. சங்க கொடியினை பி.மதிவாணன் ஏற்றினார். துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் பேசினார்.மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன்,சிபிஎம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என். பழனிச்சாமி நிறைவுரையாற்றினார். மாநாட்டில் மேற்கு ஒன்றியத் தலைவராக கே.முரு கேசன், ஒன்றியச் செயலாளராக பி.நாகேந்திரன், பொருளா ளராக எம்.தெய்வமணி உட்பட 12 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. தேனூர் சமயநல்லூர் பரவை கண்மாய் பாசன வசதி பெற சோழவந்தான் மதகு அணை மட்டத்தை உயர்த்த வேண்டும். விவசாய நிலங்களை பாதிக்காத வண்ணம் பாதியில் நிற்கும் பரவை, துவரிமான் இணைப்பு சாலை யை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். விவசாய உரம் பதுக்கப்படு வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாலுகோட்டையில் 7 கண்மாய்களை தூர்வாரும் பணி துவக்கம்
சிவகங்கை, மே 26- சிவகங்கை மாவட்டம் நாலுக்கோட்டை ஊராட்சியில் நன்கொடையாளர்கள் மற்றும் தனியார் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.55.35 லட்சம் மதிப்பீட்டில் 7 கண் மாய்களை தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலை வர் ப.மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சின்ஜெண்டா இந்தியா பிரைவேட் லிமிடெட் தேசிய தலைவர் வைத்தியநாதன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம் துணைத்தலைவர் கோ. கண்ணன், தலைமை இயக்க அலுவலர் கொண்டா ராதா கிருஷ்ணன், நாலுக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.மணிகண்டன், சிவகங்கை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ச.அன்புச்செல்வி, க.ரெத்தினவேல், பிஆர்ஒ நாக ராஜபூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு விடுதியில் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தேனி, மே 26- அரசு விடுதியில் தூய்மைப் பணிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்க தேனி ஆட்சியர் அழைப்பு விடுத்துள் ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை மாணவர் விடுதியில் காலியாக உள்ள தூய்மை பணி யாளர் பதவி தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது .இப்பதவிக்கு கொரோனா உள்ளிட்ட பிற கார ணங்களுக்காக பெற்றோரை இழந்தவர்கள் விண்ணப்பிக் கலாம். வயது வரம்பு: பட்டியல் பிரிவினர்களுக்கு 18 முதல் 37, பிசி.எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 18 முதல் 34, வயதும், இதர பிரிவினருக்கு 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மே -30 ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்பட்டோர்- சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
4 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர் கொத்தாளமுத்து(27). இவருடைய மனைவி காயத்திரி(25). இவர்களுக்கு ராகுல் ரத்தினம் என்ற 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலை யில், கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறால் தாயும், குழந்தையும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
வரத்துக்குறைவால் அதிக விலைக்கு ஏலம்போன வாழைக்காய்கள்
திண்டுக்கல், மே 26- திண்டுக்கல் சிறுமலை சந்தைக்கு வாழைதார்களின் வரத்து குறைவு மற்றும் தொடர் முகூர்த்தம் காரணமாக செவ்வாழை உள்ளிட்ட அனைத்து வாழைக்காய்களின் விலை 2 மடங்கு ஏலம் போனது. சிறுமலை வாழை ஒரு காய் 10 ரூபாய்க்கு விலை போனது. திண்டுக்கல் சிறுமலை வாழை மிக வும் பிரசித்தி பெற்றது. அதே போல திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளான வெள்ளோடு, நரசிங்கபுரம், ஆத்தூர், தருமத்துபட்டி, சின்னாளபட்டி, கோட்டூர், ஆவாரம்பட்டி, ரெட்டியார்சத்திரம் உள் ளிட்ட பல பகுதிகளில் விளையும் செவ் வாழை, கற்பூர வள்ளி, நாட்டுப்பழம், பூவன், பச்சை பழம் ஆகிய வாழைப் பழங்களும் மிகவும் ருசியானவை. இங்கு விளையும் வாழைப்பழங்கள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதி களுக்கும், கேரளா உள்ளிட்ட பிற மாநி லங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த சில வாரங்களாக காற்றுடன் பெய்த மழையின் காரணமாக திண்டுக் கல் சுற்று வட்டார கிராமங்களில் வாழை தோட்டங்கள் நாசமாகின. இதன்கார ணமாக திண்டுக்கல் சிறுமலை செட் சந்தைக்கு வாழை அதிகரித்து வந்த தால் விலை வீழ்ச்சி அடைந்து காணப் பட்டது. தற்போது வரத்து குறைந்தும் தொடர் முகூர்த்தங்கள், கோயில் திரு விழாக்கள் மற்றும் விசேஷங்கள் நடை பெற்று வரும் காரணத்தினால் வாழைப் பழங்களின் தேவைகள் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் கடந்த வாரங்களில் போன விலையைக் காட்டி லும் 2 மடங்கு கூடுதலாக இந்த வாரம் ஏலம் போனது. சென்ற வாரம் ஒரு தார் ரூ.200-க்கு விற்ற நாட்டுப்பழம் ரூ. 400க்கும், ரூ.400க்கு விற்ற கற்பூரவள்ளி ஒரு தார் ரூ.800க்கும், ரூ.500க்கு விற்ற செவ்வாழை ஒரு தார் ரூ.600லிருந்து ரூ.1000க்கும் மேல் ஏலம் போனது. இதே போல சிறுமலை வாழை ஒரு காய் ரூ.4க்கும், தரமான காய் ரூ.10க்கும் ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பணிமனை நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகி பங்கேற்றதால் நடவடிக்கை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மதுரை பணிமனை கிளை மேலாளர் அதிரடியாக இடைநீக்கம்
மதுரை, மே 26- அரசு பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மக்கள் பிரதிநிதி அல்லாத மதுரை மாவட்ட பாஜக தலைவரை அழைத்து பங்கேற்கச் செய்த அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மதுரை பணிமனை கிளை மேலாளர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பணிமனைகளிலும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது . இதில் மே 24 அன்று அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மதுரை பணிமனை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதி அல்லாத பாஜகவின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் என்பவரை அழைத்து தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கண் கண்ணாடி வழங்கியுள்ளனர். இதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கிளைமேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் மே 25 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தில், அனைத்து பணிமனைகளிலும் இலவச சுண் பரிசோதனை முகாம் நடத்தப்படுவது போல மதுரை பணிமனையில் இலவச கண் பரிசோதனை முகாம் 24.05.2022 அன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த தொண்டு நிறுவனத்தின் குழு உறுப்பினரான ஒரு கட்சி பிரமுகர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு கண்கண்ணாடி வழங்கியுள்ளார். மேற்படி நிகழ்வில் கிளைமேலாளர் கலந்து கொண்டது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இவ்வாறான அரசு பணிமனை விழாவில் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ள அனுமதித்த கிளைமேலாளர் ஏ.அபிமன்யுவை தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்து ஓழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் மழை
திண்டுக்கல், மே 26- வெப்ப சலனம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்தது. கடந்த 10 நாட்களாக கத்திரிவெயில் தாக்கம் காரண மாக திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் பெரும் துன்பப் பட்டார்கள். இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, பழனி, சத்தி ரப்பட்டி, வேடசந்தூர், நத்தம், கொடைக்கானல், ஆத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் நகர்ப்பகுதியில் லேசாக அவ்வப்போது பெய்து வந்த மழை வியாழனன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 2 மணி நேரம் வலுவாக பெய்தது. இதனால் கத்திரிவெயிலின் தாக்கம் குறைந்து திண்டுக்கல் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். திண்டுக்கல் நகரம் கொடைக்கானல் போல குளிர்ச்சியடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரையில் ஊராட்சி மன்ற செயலாளர் படுகொலை
மதுரை, மே 26- மதுரை மாவட்டம் இடையபட்டி ஊராட்சியில் (கிர்க்) செயலாளராக வரிச்சியூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வரிச்சியூர் அருகே உள்ள கருப்புகால் காளியம்மன் கோவில் பூசாரியாக வும் இருந்துவந்தார். இந்நிலையில் வியாழனன்று காலை லட்சுமணன் தனது இரு சக்கர வாகனத்தில் கோவி லுக்கு தச்சனேந்தல் கிராமத்தின் அருகே சென்றுகொண்டி ருந்தார். அப்போது திடீரென வழிமறித்த சில மர்ம நபர்கள் ஆயுதங்களால் லட்சுமணனை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் இரத்தவெள்ளத்தில் கிடந்த லட்சு மணனை அப்பகுதி மக்கள் தூக்கி ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். ஆனால் செல்லும் வழியிலயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கருப்பாயூரணி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரு கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வரிச்சியூர் அருகி லேயே குன்னத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. தற்போது ஊராட்சி மன்ற செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது.
விஷம் குடித்து லாரி ஓட்டுநர் தற்கொலை
கடமலைக்குண்டு, மே 26- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த வர் கருப்பசாமி (வயது 52). லாரி ஓட்டுநர் வேலை செய்து வந்தார். சிறுநீரக பிரச்சனை காரணமாக கருப்பசாமி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவ திப்பட்டு வந்துள்ளார். அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனம் வேதனையடைந்த கருப்பசாமி கடந்த 21 ஆம் தேதி அன்று குமணன்தொழு தனியார் தோட்ட பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு கருப்புசாமி உயிரிழந்தார். இது தொடர்பாக மயிலாடும் பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முடுவார்பட்டியில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மதுரை, மே 26- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட முடுவார்பட்டி ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் முடு வார்பட்டி ஊராட்சியின் வடக்கு பகுதியில் ரேசன் கடை திறந்திட கோரியும், பழுதடைந்த பேருந்து நிறுத்தத்தை விரி வாக்கம் செய்து புதுப்பித்திட கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலங்காநல்லூர் ஒன்றியம் முடுவார்பட்டி கிளையின் சார்பில் முடுவார்பட்டி 1 ஆவது வார்டு பகுதி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் கே.பாண்டி யன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமாமகேஸ்வரன், ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆண்டிச்சாமி ஆகியோர் விளக்கி பேசினர். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் நிறைவுரையாற்றினார்.
குரூப்-4 தேர்வர்கள் கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்க கோரிக்கை
பழனி, மே 26- பழனி ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மைய இயக்கு நர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வரு மாறு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளுக்கு தேர்வினை வருகிற ஜூலை மாதம் நடத்து கிறது. சுமார் 22 லட்சம் மாணவ,மாணவிகள் தேர்வினை எழுதவுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற குரூப்- 2 தேர்வுக்கு கட்டணம் செலுத்தாததால் தேர்வுக்கு நன்கு தயாரான பலர் தேர்வு எழுத வாய்ப்பை இழந்தனர். தேர்வு கட்டணம் செலுத்தாததால் விண்ணப்பம் நிராக ரிக்கப்பட்டு வாய்ப்பு பறிபோனது. கொரோனா தொற்று கார ணமாக 4 ஆண்டுகளுக்கு பின் தேர்வு நடத்தப்படுகிறது..தேர்வர்கள் எந்தெந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்தோம்; எத்தனை முறை கட்டண சலுகை பயன்படுத்தினோம் என்பது தெரியாமல் விண்ணப்ப கட்டணம்செலுத்தாமல் தவற விட்டுள்ளனர்.. குரூப் 2 தேர்வில் விண்ணப்பங்கள் நிராகரிக்கபட்டது போல் அல்லாமல் குரூப்4 தேர்வுக்கு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த ஒரு வாய்ப்பு வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என ஆயக்குடி மையம் சார்பில் வேண்டுகிறோம்..தேர்வுக் கான ஹால்டிக்கெட் வெளியிடுவதற்குள் இந்த வாய்ப்பை ஏற்படுத்த தேர்வாணையமும்,தமிழக அரசும் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முதியவர் தற்கொலை
திருவில்லிபுத்தூர், மே 26- வத்திராயிருப்பு புதுப்பட்டி பசும்பொன் நகரை சேர்ந்த வர் பாலு ( வயது 60) இவருக்கு இளம் வயதிலேயே கண் பார்வை இல்லாததால் தன் தம்பி முருகன் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார் .இந்த நிலையில் தனக்கு கண் பார்வை இல்லையே என்ற மன உளைச்சல் காரணமாக பாலு சம்ப வத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.