தேனி,மார்ச் 18 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிடும் பொருட்டு 23.09.2021 அன்று ரூ.3,025 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தொடங்கி வைத்தார்கள். ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 1,727 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட இலக்கு நிர்ண யிக்கப்பட்டு, இதுவரை பெரியகுளம் சட்ட மன்ற தொகுதிக்குபட்ட 254 விவசாயி களுக்கும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 292 விவசாயிகளுக்கும், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட 295 விவசாயிகளுக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 538 விவ சாயிகளுக்கும் என மொத்தம் 1,379 விவசாயி களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள் தாங்கள் பெற்று வரும் பயன்களை தெரிவித்துள்ளனர். தேனி வட்டம், காட்டுநாயக்கன்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த சுருளிவேல் கூறுகை யில், விவசாய தொழினை மேம்படுத்திட போதுமான நிதி என்னிடம் இல்லாமல் பிறரிடம் நிதியுதவி கேட்டும் கிடைக்கப் பெறவில்லை. மாதந்தோறும் விவசாய நிலத்திற்கான மின் கட்டணத் தொகை செலுத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். இந்நிலையில் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து விவசாயி களின் நலனை பாதுகாத்திடும் வகையில் வேளாண் சார்ந்த திட்டங்களை செயல் படுத்தி வருவதன் மூலம் ஒரு லட்சம் விவ சாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் எனது விவசாய நிலத்திற்கு மின்இணை ப்பு கிடைக்கப் பெற்றது. இதன் மூலம் தற்போது நல்ல முறையில் விவசாயம் செய்து, நல்ல நிலையில் வாழ்ந்து வருகி றேன். முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். இத்தகவலை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண் முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலு வலர் (செய்தி) நா.விஜயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளனர்.