இராமநாதபுரம், மார்ச் 16- இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் மையத்தில், நெல் கொள் முதல் நிலையங்களில் விவசாயி களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர் வாகி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகனன், சிபிஎம் தாலுகா செயலாளர் போஸ், விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் பெரி யசாமி, ஆட்டோ சங்க நிர்வாகி கருப்பசாமி, வாலிபர் சங்க நிர்வாகி ஜெயக்குமார் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சிக்கல் மையத் தில் நெல் கொள்முதல் நிலை யங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் லுக்கு 45 நாட்கள் ஆகியும் பணப்பட்டுவாடா செய்யப்படு வதில்லை. போதுமான குடோன் வசதி இல்லை என்பன உள்ளிட்ட வசதி குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.