விருதுநகர், மார்ச்.25- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொள் முதல் நிலையங்களில் தார்ப்பாய், சாக்குகள் இல்லாத காரணத்தால் வாங்கப்பட்ட நெல் மணிகள் மழையில் நனைந்து கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் ஆதங்கத்துடன் புகார் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. வேளாண்மைத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது விவசாயிகள் கூறியதாவது: திருச்சுழி, காரியாபட்டி பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை நன்றாக பெய்துள் ளது. இதனால் விவசாயிகள் அதிக அள வில் நெல் பயிரிட்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. தற்போது நெல் கொள்முதல் நிலையங்களும் அமைக்கப்பட்டு வாங்கப் படுகின்றன. ஆனால் அங்கு சிலர் தலையீடு செய்து மூடை ஒன்றுக்கு ரூ.40 முதல் 60 வரை தனியாக வசூலிக்கின்றனர் என பகிரங்கமாக புகார் தெரிவித்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் பற்றாக்குறை உள்ளது எனவும், தார்ப்பாய் இல்லாத காரணத்தால் நெல் மணிகள் மழையால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், திருவில்லிபுத்தூர், வத்தி ராயிருப்பு, இராஜபாளையம் பகுதிகளில் நல்ல மழை பெய்து, இரண்டாம் போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனால் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உரம், யூரியாக்கள் இருப்பில் இல்லை. இதன் காரணமாக தனியாரிடம் வாங்க வேண்டியுள்ளது. தனியார் வியாபாரிகளோ, யூரியா உப்புடன் சேர்த்து திரவ வடிவிலான யூரியா வாங்க நிர்ப்பந்தம் செய்கின்றனர். எனவே, கூட்டுறவு வங்கிகள் மூலம் உரம், யூரியா கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டு மென விவசாயிகள் வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், ஒரு வாரத்திற்குள் அனைத்து கூட்டுறவு வங்கிக ளுக்கும் உரம், யூரியா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கும் உச்ச வரம்பானது கடந்த 25 ஆண்டுகளாக ரூ.3 லட்சமாகவே உள்ளது. எனவே, அதை ரூ.6 லட்சமாக உயர்த்திட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா தெரி வித்தார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், அரசு உத்தரவில் அவ்வாறு உள்ளது. எனவே, இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
கால்நடை மருத்துவர்கள் இல்லை
விருதுநகர் மாவட்டத்தில் அரசு கால் நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள், உதவியாளர்கள் இல்லை. இதனால், விவ சாயிகள் தங்களது கால்நடைகளுடன் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தெரிவித்தார். மொத்த காலிப் பணியிடங்கள் எவ்வ ளவு உள்ளது என கணக்கீடு செய்து அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதிலளித்தார். சாத்தூரில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். நென்மேனி அருகே விதிமுறைகளை மீறி 8 அடி முதல் 15 அடி ஆழத்திற்கு தனியாரால் செம்மண் அள்ளப் படுகிறது. இதனால், கால்நடைகள் பள்ளத் தில் விழுகின்றன. மேலும், வரத்துக் கால்வாய்கள் பாதிக்கப்படும் என கருப்பை யா என்ற விவசாயி தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் பதிலளித்தார்.
பஞ்சாலை கழிவுகளால் கண்மாய் நீர் பாதிப்பு
இராஜபாளையம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகமானது கொத்தன்குளம் அருகே கொட்டி வருகிறது. குப்பை வாகனங்கள் திறந்த நிலையில் உள்ளதால், அருகில் உள்ள வயல் வெளியில் விழுந்து பயிர்கள் சேதமாகிறது. மேலும், தனியார் பஞ்சாலை கழிவுகள் நீர்வரத்து பாதைகளில் எரிக்கப்படுகின்றன. இதனால் கண்மாய் நீர் பாதிக்கக்கூடும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென விவசாயி ஒருவர் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார். அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து புகார் அளித்த விவசாயி மீதே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள னர். தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென விவசாயிகள் பலர் புகார் தெரி வித்தனர்.