districts

சண்முகா நதி அணை ஆக்கிரமிப்பை அகற்றுக!

தேனி, செப்.23- சண்முகா நதி அணை  ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில்  விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில்,  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் ஆர்.வி.ஷஜீவனா தலை மையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட வன  அலுவலர் சமர்தா, துணை இயக்குநர் மேகலை புலி கள் காப்பகம் ஆனந்த், மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (விவ) பொ.தன லெட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ)  சங்கர், தேனி மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ஏரா ளமான விவசாயிகள் மற்றும்  விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேளாண்  காடுகள் திட்டத்தில் வழங்  கப்படும் மரக்கன்றுகளை நெகிழி பைகளில் வழங்கு வதற்கு பதிலாக மூங்கில், மண்பாண்டங்களில் வழங்க வேண்டும். கரும்பு உற்பத்தி யில் வறட்சியை தாங்கக் கூடிய புதிய ரகங்களை ஆய்வு செய்து வழங்க வேண்டும். திராட்சை பழங்க ளுக்கு பறவை தடுப்பு வலை  வழங்க வேண்டும். கூட்டு றவு கடன் சங்கங்களில் 1,60,000 வரை ஜாமீன் இன்றி கடன் வழங்க வேண்டும். சீமை கருவேலமரங்கள் அதிகளவில் உள்ளதால் ஆயக்கட்டு கண்மாய் நீர் வளம் குறைவதால் அதனை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகா நதி  ஆக்கிரமிப்பு அகற்றிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இதன்மீதான தனி கவனம் மேற்கொண்டு சாத்தியக்கூறுகள் இருப்பின் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துறை அலு வலர்களுக்கு உத்தரவிட் டார்.