districts

img

குடிமனை பட்டா வழங்கக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, அக்.19- நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பருத்திப்பாடு ஊராட்சிக்குட்பட்ட சேர்ந்தான் குளம் கிராமத்தில் 3தலைமுறைகளாக 200 ஆண்டுகள் குடியிருந்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்கள் பாதைகளில் நிலமோசடி பேர்வழிகளால் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள இரும்பு முள்வேலிகளை அகற்றிட  வேண்டும் உள்ளிட் ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பெருந்  திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.கற்பகம் ஆகியோர் விளக்கிப் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன்,எம். சுடலைராஜ், எஸ்.பெருமாள், பீர் முகம்மது ஷா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்லத்துரை, மாவட்டச் செயலாளர் மாயகிருஷ்ணன், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் அருணசலம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பருத்திபாடுக்குட்பட்ட சேர்ந்தான்குளத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங்குள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். எனவே அதனை மீட்டு தரவேண்டும். மேலும் அங்குள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.