சிவகங்கை, ஜூலை 28- மானாமதுரை தாலுகாவில் உள்ள கிரா மங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், பருத்தி, கரும்பு, வாழை மற்றும் பல வகையான தோட்டப் பயிர்கள் கிணற்று இரவை பாசனம் மூலம் விவசாயம் செய் யப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் முதல் இப்பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளிக்காற்றால் பயிர் விளைச் சல் பகுதிகள் மிக மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளன. இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அதி களவில் உள்ளன. அவைகள் இரை தேடி விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் விவ சாயிகளை தாக்கியும் வருகின்றது. கன மழையால் ராஜ கம்பீரம், கிருங்காக் கோட்டை, முத்தனேந்தல் ,பீசர் பட்டினம், கீழப்பசலை இடைக்காட்டூர், பாப்பான் குளம் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சூறாவளி காற்றால் சாய்ந்தன. மழைநீரும் தேங்கி யுள்ளதால் நெல் அனைத்தும் முளைக்கத் துவங்கியுள்ளன. தண்ணீருக்குள் மூழ்கிய நெல் அழுகி விட்டது .பீசர்பட்டினம் பகுதி யில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் வயலில் இதே நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த கவலையுடன் உள்ளனர்.
பெரும் சேதம் - மன உளைச்சலில் விவசாயிகள்
இதுகுறித்து பீசர்பட்டினம் கிராமத்தில் உள்ள விவசாயி ஜெயம் பிரகாஷ் என்பவ ரிடம் கேட்டபோது, சுமார் 11 ஏக்கர் கோடை விவசாயம் செய்துள்ளேன். பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஏக்கருக்கு சுமார் 50 மூடை வரை நெல் வரும் என எதிர் பார்த்து, இன்னும் ஓரிரு நாட்களில் அறு வடைக்கு தயாராக இருந்த நெல்லானது கடந்த வாரம் வீசிய சூறைக்காற்றில் சாய்ந் தும், அதன் மேல் தொடர்ச்சியாக பெய்த கனமழையின் நீரானது தேங்கியதால் நெல் முளைக்க ஆரம்பித்துவிட்டது . இத னால் மிகப்பெருமளவில் பொருளாதார சேதம் ஏற்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளா கியுள்ளோம். இப்பகுதியில் காட்டுப்பன்றி யின் நடமாட்டம் மிக அதிகம். அதனால் எங்கள் குடும்பத்தினர் அனைவருமே சேர்ந்து இரவு முழுவதும் காவல் காத்து இப்பயிரை காப்பாற்றி உள்ளோம் வெளி நபர்களிடம் வட்டிக்கு வாங்கி கடன் வாங்கி விவசாயத்தை செய்தோம். ஆனால் வாங் கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு தலை யிட்டு எங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் இழப்பீடு வழங்க வேண்டுகோள்
முத்துக்காளை என்பவர் கூறுகையில், மழையால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற் பட்டுள்ளது. இதனை எவ்வாறு சரி செய்வது என்பது தெரியவில்லை. இதில் அரசு எங் கள் மீது கருணை கொண்டு ஏதாவது உதவி செய்து இந்த பொருளாதார சேதத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உதவினால் மட்டுமே நாங்கள் விவசாய நடவடிக்கை களில் ஈடுபட முடியும். இல்லையெனில் விவ சாய தொழிலை விட்டு விட்டு நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்து மாற்று வேலை களுக்கு எங்கள் குடும்பத்தினருடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே தயவு செய்து பொருளாதார இழப்பினை ஈடு கட்டும் வகையில் தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கிருங்காக்கோட்டை விவசாயி காசி ராஜன் தெரிவிக்கையில், நான் இரண்டு ஏக்கர் நெல் விவசாயம் செய்துள்ளேன். கன மழையால் வயலில் நீர் தேங்கி இருப்பதை பயன்படுத்தி காட்டு பன்றிகள் வயல் முழு வதும் கூட்டம் கூட்டமாக வந்து படுத்து புரண்டு நெற்களை கடித்து சேதப்படுத்தி யது. அதனை விரட்ட முயன்ற போது என்னை தாக்க வந்தது. நான் உயிர் தப்பித் தது பெரும்பாடாகிவிட்டது. இரண்டு ஏக்கர் நிலத்தில் உள்ள நெல்லை அறுவடை செய்ய முடியாமல் இருக்கின்றேன். சாகு படிக்கு பல ஆயிரம் ரூபாய் செலவழித் துள்ளேன். அறுவடை நேரத்தில் இப்படி ஒரு இழப்பை சந்தித்தது மிகப்பெரிய வருத் தத்தையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அரசு தயவு செய்து எங்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிடுக!
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், இது வரை இல்லாத அளவுக்கு இப்போது தொடர்ச்சியான கனமழை பெய்துள்ளது. கீழ்ப்பசலை, பீசர் பட்டினம், இடைக் காட்டூர், பாப்பான்குளம் ,ராஜகம்பீரம், கிருங் காக்கோட்டை பதினெட்டாம் கோட்டை, மேட்டுமடை ஆகிய பகுதிகளில் பயிர் செய்துள்ள நெல், பருத்தி, கரும்பு பயிர்கள் நாசமாகியுள்ளது. பதினெட்டாம் கோட்டை பகுதியில் கரும்பு விவசாயத்திற்காக போடப்பட்ட கரும்பு கருணைகள் அனைத் தும் அழுகிவிட்டன. ஆவரங்காடு பகுதியில் கத்தரி செடிகள் அனைத்தும் அழுகி நாச மாகிவிட்டது. ஆகவே அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்து ஏக்கர் ஒன்றிற்கு ஐம்ப தாயிரம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.