திண்டுக்கல், மே 30- சிறப்பு திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023-ஐ வாபஸ் பெற ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலை வர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம் செவ்வா யன்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி பேசு கையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நில ஒருங்கிணைப்பு ( சிறப்பு திட்டங்களுக்கான) சட்டம் எந்த விவாதமுமின்றி நிறைவேற்றப் பட்டுள்ளது. நிலத்தை கையகப் படுத்துவது தொடர்பாக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013, தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத் திட்டங்களுக்கான நிலம் கைய கப்படுத்துதல் சட்டம் 1978, தமிழ் நாடு தொழில் துறை நோக்கங்க ளுக்காக நிலம் கையகப்படுத்து தல் சட்டம் 1997. தமிழ்நாடு நெடுஞ் சாலைகள் சட்டம் 2001 என பல சட்டங்கள் உள்ளன. இந்நிலையில் புதிதாக எதற்கு இப்படி ஒரு சட்டம் என்று கேள்வி எழுகிறது. அரசு திட்டங்களுக்காக நிலத்தை கைய கப்படுத்தும் போது விவசாயி கள் ஒப்புதல் பெற்று செயல்படுத் தப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த தேர்தல் வாக்குறுதிக்கு நேர் எதி ரானது இந்த சட்டம். சட்டமன்றத் தில் இந்த சட்டத்தை எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றி யிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண் டும். இந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளின் குர லாக நாங்கள் சொல்கிறோம். இதனை பதிவு செய்து முதல்வ ருக்கு எங்களது வேண்டுகோளாக பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் குறை தீர் கூட்டம் முடி வுற்றதும் செய்தியாளர்களிடமும் இதே கருத்தை எம்.இராமசாமி தெரிவித்தார். பேட்டியின் போது தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் லட்சுமணப் பெருமாள். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத்தலைவர் என்.பெரு மாள், பொருளாளர் தயாளன், மற் றும் காசிமாயன், சக்திவேல், சரத் குமார், வெள்ளைக்கண்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
மணல் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!
மாவட்டம் முழுவதும் எந்தவித அனுமதியுமின்றி மணல் மாஃபியா கும்பலால் மணல், வண்டல் மண் அள்ளப்படுகிறது. சாணார்பட்டி, தொப்பம்பட்டி மானூர் பகுதி களில் உள்ள விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. இந்த மணற் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். திண் டுக்கல் அடியனூத்து ரெண்டல பாறையில் மாம்பலக்கூழ் தயா ரிக்கும் நிறுவனம் வெளியேற்றும் ரசாயனக் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. குடி நீருக்காக நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளும் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. ஆட்சியர் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாவட் டத்தலைவர் என்.பெருமாள் பேசி னார்.
சாணார்பட்டி ஒன்றியம் முழு வதும் மணல், வண்டல் மண் எங்கு எடுத்தாலும் ரூ.700 சீட்டு கட்ட வேண் டும். இது குறித்து கனிமவளத்துறை யில் கேட்ட போது நாங்கள் அனு மதி கொடுக்கவில்லை என்கிறார் கள். எனவே சுரங்கம் மற்றும் கனிம வளத்துறையினர் ஊராட்சி ஒன்றி யம் மூலம் மண் அள்ள விவசாயி களுக்கு அனுமதி வழங்க வேண் டும். மேலும் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் சாணார்பட்டி ஒன்றியச்செயலாளர் வெள்ளைக்கண்ணன் பேசினார். மாங்கரை ஆற்றை தூர்வாரி, பலப்படுத்துக! மாங்கரை ஆற்றை தூர் வாரி, இரு கரைகளையும் பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஸ்ரீராம புரம், புதுப்பட்டி, பண்ணைப்பட்டி, காமாட்சிபுரம், கொத்தப்புள்ளி உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் உள்ள 15 குளங்களில் நீர் நிரப்ப முடி யும். இதன் மூலம் இப்பகுதி விவ சாயம் சிறக்க வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் சங்க பொருளாளர் தயாளன் பேசினார். கதிரனம்பட்டி பகுதியில் தர்ம ராஜ் என்பவர் உள்ளிட்ட 20 விவ சாயிகள் 70 ஏக்கர் பரப்பளவில் விவ சாயம் செய்து வருகிறார்கள். இவர் களின் விவசாய விளை பொருட் களை எடுத்துச் செல்ல விடாமல் சுப்ரமணி என்ற தனி நபர் பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பாதையை மீட்டுத் தர வேண்டும் என்று தர்மராஜ் பேசினார். அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பூங்கொடி உறுதி யளித்தார். (ந.நி.)