விவசாயிகளை தொழில் முனைவோர் ஆக்கும் திட்டம்
தென்காசி, செப். 1 மாநில தீவன அபிவிருத்தி திட்டம் 2022-23 தமிழ்நாடு அரசு பால் உற்பத்தியாளர் கால்நடை தீவன தொழில் முனைவோர் திட்டம் மூலமாக ஊறுகாய்ப்புல் அலகு நிறுவுதல் செயல்படுத்த ப்படவுள்ளது. பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயி களுக்கு 25சதவீத மானிய விலையில் பண்ணைக் கருவிகளை வழங்கி விவசாயிகளை தொழில் முனை வோராக உருவாக்கும் திட்டம் நாற்பத்தி இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு முழுவதும் நான்கு அலகுகளை செயல்படுத்திட தெற்கு மண்டலத்தில் ஒரு அலகு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு வணிக ரீதியில் 3200 ஹெக்டர் ஊறு காய்ப்புல் தயாரிக்கும் பால் உற்பத்தியாளர்/ கால்நடை வளர்ப்போர் / கிராமப்புற இளைஞர்கள் சுய உதவிக்குழுக்களாக இருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் பேரிடர் ஒத்திகை பயிற்சி
திருநெல்வேலி, செப்.1 வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து தமிழகம் முழு வதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்வுகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் ஏற்படும் பேரிடரில் சிக்கித் தவிப்ப வர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து மாவட்ட நிர்வா கம் சார்பில் வியாழக்கிழமை நெல்லை வண்ணார் பேட்டை, வி.கே.புரம், முக்கூடல், களக்காடு, கூத்தங்குழி ஆகிய 5 இடங்களில் தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் பேரிடர் பயிற்சி பெற்றவர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்களுடன் இணைந்து ஒத்தி கை பயிற்சி நடைபெற்றது. நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி கரையில் நடந்த பேரிடர் ஒத்திகை பயிற்சியை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தொடங்கி வைத்தார். ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கி தவிப்பவர்களை தண்ணீர் கேன், கம்பு, டியூப் உள்ளிட்ட எளிமையான பொருட்கள், பயனற்ற பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தண்ணீரில் மூழ்கியவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு தத்ரூபமாக முதல் உதவி சிகிச்சை அளித்துக் காட்டினர். இதனை பார்வையிட்ட பொது–மக்களிடம் ஒவ்வொருவரும் கட்டாயம் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் என்ன? என்பதை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள், பாளை தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், தேசிய பேரிடர் மீட்பு குழு ஒருங்கி ணைப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: பாபநாசம் அணை திறப்பு
திருநெல்வேலி, செப்.1 நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறில் 12.8 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட மருதூர் மேலக்கால், கீழக்கால், தெற்கு மற்றும் வடக்கு பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் நிலங்க ளுக்கு வியாழக்கிழமை முதல் முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து வியாழன் முதல் 30 நாட்களுக்கு மொத்தம் 2073.60 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
பயிற்சி எஸ்ஐகளுக்கு காவல் நிலையங்களில் பணி நியமனம்
தூத்துக்குடி, செப். 1 சென்னை காவல் உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு பயிற்சி முடித்த 18 பயிற்சி எஸ்.ஐக்களை பல்வேறு காவல் நிலையங்களில் நியமனம் செய்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்தார். 2021ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 927 பேர் சென்னை, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழக காவல்துறை உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்தனர். அதனை தொடர்ந்து பயிற்சி முடித்தவர்களில் 18 பேர் செயல்முறை பயிற்சி பெறுவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழனன்று அறிக்கை தாக்கல் செய்தனர். மேற்படி செயல்முறை பயிற்சி பெறவுள்ள 18 பயிற்சி உதவி ஆய்வாளர்களை தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் நியமனம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்போது பயிற்சி பெற உள்ள பயிற்சி எஸ்.ஐக்கள் காவல் நிலையத்தில் உள்ள காவலர் பதவி முதல் எஸ்.ஐ பதவி வரை உள்ள அனைத்து பணிகளை யும் சிறப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு
தூத்துக்குடி, செப். 1 திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் அறங்காவலர் குழு தலைவருக் கான தேர்தலில் அருள் முருகன் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந் தூரில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சாமி கோயில், முருகபெருமா னின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு 5 பேரை அறங்காவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி மாப்பிள்ளையூரணி, இந்திரா நகரைச் சேர்ந்த வி.செந்தில் முருகன், திருச்செந்தூர் மானாடு தண்டு பத்து, மேற்கு தெருவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான கே.பி.கே.குமரன் மனைவி அனிதா குமரன், வடக்கு ஆத்தூர் கீழ முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ், சென்னை சாந்தோம், சல்லிவன் தெருவைச் சேர்ந்த இரா.அருள் முருகன், தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்த பா.கணேசன் ஆகிய 5 பேரை நியமித்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோ யில் அறங்காவலர் குழு தேர்வு, திருக்கோ யில் இணை ஆணையர் அலுவலகத்தில் வியாழனன்று காலை நடைபெற்றது. இதில் இணை ஆணையர் (கூ.பொ) ம.அன்பு மணி முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக செந்தில் முருகன், அனிதா குமரன், ராமதாஸ், அருள்முருகன், கணேசன் ஆகிய ஐந்து பேர் பதவி யேற்று கொண்டனர். அதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் தூத்துக்குடி உதவி ஆணையர் தி.சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவ ராக ரா.அருள்முருகன் தேர்ந்தெடுக்கப் பட்டார். தொடர்ந்து இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் தலைவர் பதவியேற்றுக் கொண்டார். கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அறநிலையத் துறையினர், திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
குமரி மாவட்டத்தில் தொடரும் மழை மாம்பழத்துறையாறில் 32 மி.மீ. பதிவு
நாகர்கோவில், செப். 1- கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் அதிகபட்சமாக 32 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளி லும் பாலமோர் உள்ளிட்ட மலையோர பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு: பேச்சிப்பா றை-4.4 மி.மீ, பெருஞ்சாணி-3, சிற்றார்-1-12.6, சிற்றார்-2-22.8, தக்கலை-8.3, குளச்சல்-12.8, இரணியல்-14, பாலமோர்- 9.2, மாம்பழத்துறையாறு- 32, திற்பரப்பு-17.2, கோழிப்போர் விளை-6.2 ஆணைக்கிடங்கு-30.2, அடையா மடை-5, குருந்தன்கோடு-13.8, முள்ளங்கினாவிளை-4.6. மி.மீட்டர் மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வியாழனன்று காலை 42.87 அடியாக இருந்தது. அணைக்கு 676 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 569 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 68.50 அடியாக உள்ளது. அணைக்கு 373 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கி றது. அணையில் இருந்து 310 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார் நீர்மட்டம் 11.97 அடியாக உள்ளது. அணைக்கு 137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1 அணை களில் இருந்து 1029 கன அடி தண்ணீர் வெளியேற் றப்பட்டு வரு கிறது. 3 அணைகளில் இருந்து வெளியேற் றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடி உபரி நீர் திறப்பு வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி, செப்.1- வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகி அணையில் இருந்து ஆற்றின் வழியாக வினாடிக்கு 4000 கன அடி தண் ணீர் திறக்கப்பட்டது .இதனால் வைகை கரையோ ரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்ப் படிப்பு பகுதிகளான மேகமலை, வருசநாடு, குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள் ளிரவில் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு, அணைக்கு ஒரே நாளில் நீர் வரத்து 2700 கன அடி உயர்ந்து, 4000 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 70.5 அடியாக உயர்ந்தது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை கொடுக் கும் விதமாக அபாய சங்கு ஒழிக்கப்பட்டு, உபரி நீர் ஆற்றின் வழி யாக திறக்கப்பட்டது. எனவே கரையோரத்தில் குடியிருக்க கூடிய மக்கள் ஆற்றை கடக்கவும், ஆற்றில் நீராடவோ, வேறு எந்த காரணத்திற்காகவும் கரைப்பகுதியில் செல்ல வேண் டாம் என்று பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், மஞ்சளாறு, தேவ தானப் பட்டி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால்சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெ டுத்து ஓடியது. ஹைவேவிஸ் சாலையில் 10-வது கொண்ட ஊசி வளைவான அடுக் கம்பாறையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இருப்பினும் சாலை ஓரத்திலேபாறை, மண் விழுந்ததால் போக்குவரத்திற்கு பெரிய அளவில் பாதிப் பில்லை. மெதுவாக இப்பகுதியை வாகனங்கள் கடந்து சென்றன..புதன்கிழமை பாறை உடைக்கப்பட்டு செப்பனிடும் பணி நடைபெற்றது. புதன்கிழமை காலை நிலவரப்படி முல்லைப்பெரி யாறு அணையின் நீர்மட்டம் 135.75 அடியாக உள்ளது. நீர் வரத்து 2272 கன அடி. திறப்பு 1822 கன அடி. இருப்பு6055 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடி. வரத்து 153 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.67 அடி. வரத்து 97 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி. மழையளவு பெரியாறு 13.2, தேக்கடி 48, கூடலூர் 21.6, உத்தம பாளையம் 26.8, வீரபாண்டி 25, வைகை அணை 56, மஞ்சளாறு 57, சோத்துப்பாறை 21, ஆண்டி பட்டி 82.8, அரண்மனை புதூர் 50.8, போடி 52.4, பெரியகுளம் 55 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மூடி சீரமைக்க நடவடிக்கை; சாராட்சியர் உறுதி
முடிவுக்கு வந்தது மீனவர் போராட்டம்
நாகர்கோவில், செப். 1- தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மூடவும் கடலில் மூழ்கி இறந்த மீனவ ரின் குடும்பத்திற்கு நிவார ணம் அளிக்கவும் நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. சார் ஆட்சி யர் நடத்திய சமரச பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது கன்னியாகுமரி மாவட் டத்தின் மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறை முகம். இந்த துறைமுகம் கட்டப்பட்ட நாளில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. சரியான கட்டமைப்புடன் துறைமுகம் கட்டப்படாததால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இங்கு சுமார் 25 மீனவர்கள் உயிர் பலியாக நேர்ந்துள்ளது. திங்களன்று இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (67) வள்ளம் கவிழ்ந்து கட லில் விழுந்தார். அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீர மைப்பு செய்ய வலியுறுத்தி இனயம், தூத்தூர் மண்ட லங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்ட ணம் மீன்பிடி துறைமுகத்தில் புதனன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் அமல்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் மீன்பிடி துறைமுக ஏலக் கூடத்தில் வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் குளச்சல் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சமாதானப் படுத்த முயன்றனர். இது வரை 28 மீனவர்கள் இறந்துள்ளனர். இனியும் தாமதிக்காமல் துறை முகத்தை உடனே மறுசீர மைப்பு செய்ய வேண்டும் என்றனர் போராட்டக்கா ரர்கள். மேலும் பணிகள் தொடங்கிட துறை முகத்தை மூட வேண்டும், உயிரிழந்த வர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் பத்மநா பபுரம் சார் ஆட்சியர் அவர் மேல் மங்கை, கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜேஷ் ஆகி யோர் மீனவப் பிரதிநிதி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். துறைமுகத்தை மூடுவது பற்றியும், நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சார் ஆட்சியர் உறுதி அளித் தார். இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இரவு 7.30 மணிக்கு அமல்ராஜ் உடல் உடற்கூராய்வுக்காக காவல்துறையினரிடம் ஒப்ப டைக்கப்பட்டது. காவல் துறையினர் உடலை பெற்று ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வியாழனன்று அமல் ராஜ் உடல் கூராய்வு செய்யப்பட்டு உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது.