காலமானார்
இராமநாதபுரம், செப்.18- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் மீசல் கிராமத்தில் முன்னாள் கிளைச் செயலாளர் சி.வேலு செவ்வாய்க்கிழமையன்று காலமானார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தாலுகாச் செய லாளர் வி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன், தாலுகா குழு உறுப்பினர் முத்துமணி, கிளைச் செயலா ளர் பி.சீனிவாசன், மூக்கையன், சுந்தர்ராஜன், சந்திரன், கருப்புசாமி, முருகவேல், சுரேஷ், சரவணன் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது
சாத்தூர், செப்.18- சாத்தூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற் பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முரு கேஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற னர். பழைய அரசு மருத்துவமனை அருகேயுள்ள தனியார் கடையில் ஒருவர் லாட்டரி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை செய்தனர். அதில், அவர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சாகுல்ஹமீது(49) என்பது தெரியவந்தது. மேலும் அவரிட மிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1640 ரொக்கத்தை பறி முதல் செய்ததோடு சாகுல்ஹமீதை கைது செய்தனர்.
இரு சக்கர வாகனம் மாயம்
காரியாபட்டி, செப்.18- காரியாபட்டி அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் திருடு போனது. காரியாபடடி அருகே உள்ளது அல்லாளப்பேரி. இப்பகுதியைச் சேர்ந்தவர் வினோபாஜி(47). இவர் தனது இரு சக்கர வாகனத்தை வழக்கம் போல வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்பு, திரும்ப வந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை யாம். எனவே, இதுகுறித்து வினோபாஜி காரியாபட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.
காப்பர் காயில் திருடியவர் சிசிடிவி கேமராவால் சிக்கினார்
விருதுநகர், செப்.18- விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டத்தைச் சேர்ந்தவர் சோலைமலைக்கண்ணன். இவருக்கு சொந்த மான வெல்டிங் பட்டறை வடமலைக் குறிச்சி சாலையில் உள்ளது. இவர் பட்டறையின் உள் மற்றும் வெளிப் பகு தியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார். அதனை தனது செல்போனுடன் இணைத்துள்ளார். இந் நிலையில், சோலைமலைக்கண்ணன் வழக்கம் போல இரவு பட்டறையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்தநிலையில், பட்டறைக்குள் அதிகாலை உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த காப்பர் காயிலை திருடி யுள்ளார். இதனை சோலைமலைக் கண்ணன் தனது செல்போனில் பார்த்துள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட பெரி யார் பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் (28) என்ப வரை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து விருது நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி: பெரியகுளம் கண்மாய் சாலையை சீரமைக்க ரூ.1 கோடியில் அடிக்கல்
சிவகாசி, செப்.18- சிவகாசியில் சேதம டைந்து போக்குவரத்திற்கு சிரமமான பெரியகுளம் கண் மாய் சாலையை சீரமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகாசியின் முக்கிய சாலையாக இருந்து வரு வது பெரியகுளம் கண்மாய் கரை சாலை. இவ்வழியாக திருவில்லிபுத்தூர் மற்றும் விளாம்பட்டி சாலையை இணைக்கும் சாலையாக இது உள்ளது. இதனால், இச் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வரு கின்றன. மேலும், திருவில்லி புத்தூரிலிருந்து சிவகாசி நகருக்குள் செல்லாமல் அரசு மருத்துவமனை வழி யாக விருதுநகருக்கு எளி தாக செல்லவும் இச்சாலை பயன்பட்டு வந்தது. இச்சாலை யால் சிவகாசி நகருக்குள் ஓர ளவு வாகன நெரிசல் குறைந் துள்ளது எனவும் அப்பகுதி யினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பெரிய குளம் கண்மாய் சாலை குண் டும், குழியுமாக மோசமாக காட்சியளித்தது. எனவே, அதனை சீரமைக்க வேண்டு மென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிவகாசி சட்ட மன்ற உறுப்பினர் ஜி.அசோ கன், இப்பிரச்சனை குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்தநிலையில், தமிழக முதலமைச்சரின் சிறப்பு நிதி யிலிருந்து சிவகாசி பெரிய குளம் கண்மாய் கரை சாலை யை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற் கான அடிக்கல் நாட்டு விழா சிவகாசி சட்டமன்ற உறுப்பி னர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
விருதுநகர், செப்.18- மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல் நகர்- சமயநல்லூர், மதுரை - கூடல்நகர், மதுரை - திண்டுக்கல் தடங்களில் பொறி யியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற வுள்ளன. எனவே, செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை இத்தடத்தி லான ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங் கள் செய்யப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள் ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் (16845) செப்.18 ஆம் தேதி முதல் அக்.7 ஆம் தேதி வரை (செப்.24, அக்.1 தவிர) திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். திண்டுக் கல் - செங்கோட்டை வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும். அதாவது அப்பகுதியாக இந்த ரயில் செல்லாது. மறுமார்க்கத்தில், செங்கோட்டை யிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் (16846) செப். 19-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை (செப். 25, அக். 2 தவிர) திண்டுக் கல்லிலிருந்து காலை 11.15 மணிக்கு புறப் பட்டு, ஈரோடு வரை செல்லும். மாற்றுப் பாதையில் இயக்கப்படும் செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் (16848) செப்.19 முதல் அக்.7 வரை (செப்.25, அக். 2 தவிர) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியே செல்வதற்கு பதி லாக, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். குருவாயூரிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் - சென்னை விரைவு ரயில் (16128) செப். 23, 25, 26, 27, அக். 2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், அருப்புக் கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழி யாக இயக்கப்படும். இதேபோல், நாகர்கோவிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகர் கோவில்- மும்பை விரைவு ரயில் (16352) செப்.26, அக்.3 ஆகிய தினங்களில் கன்னி யாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும். கன்னியாகுமரி- ஹவுரா அதி விரைவு ரயில் (12666) செப்.28 ஆம் தேதியும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவே இயக்கப்படும். நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில் - கச்சே குடா விரைவு ரயில் (16354) செப். 28 ஆம் தேதி திண்டுக்கல், கரூர் வழியே இயக்கப் படும். மதுரையிலிருந்து காலை 11:55 மணிக் குப் புறப்படும் மதுரை- பிகானர் விரைவு ரயில் (22631) செப்.26, அக்.3 ஆகிய தேதி களில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் படுகொலை: சிவகங்கையில் கிராம மக்கள் சாலை மறியல்
சிவகங்கை, செப்.18- சிவகங்கையில் பட்டியலினத்தைச் சேர்ந்த காளையாவின் படுகொலையை கண்டித்து டாக்டர் அம்பேத்கார் சிலை அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பூவந்தி காவல்துறை எல்கையில் உள்ளது பாப்பாகுடி. இவருக்கு மனைவி பஞ்சு, 3 பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். 3 பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகனும், அப்பாவும் சேர்ந்து டாட்டா ஏஸ் வாகனத்தை வாட கைக்கு விட்டு வருகின்றனர். இந்நிலை யில் பாப்பாக்குடி அருகே உள்ள கிரா மத்திற்கு வாடகைக்கு வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு இவரு டைய வாகனத்தில் ஒருவர் ஏறி உட் கார்ந்து வாகனத்தை எடுக்க முயன்றுள் ளார். அப்போது ஏன் எங்கள் வாகனத்தை எடுக்கிறீர்கள் என்று அழகர்சாமி கேட்டுள் ளார். அப்போது அவர் மிரட்டி சென்றுள்ளார். இந்நிலையில், அழகர் சாமியின் தந்தை காளையா பாப்பாக்குடி கிராமத்தில் இருந்து திருமாஞ்சோலைக்கு 17 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வந்து திரும்பும் போது கண்மாய்க்ரை அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பூவந்தி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை செய்து வருகின்றனர். கிராம மக் கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலிருந்து ஊர் வலமாக வந்து அம்பேத்கார் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் முத்துராமலிங்க பூபதி, மாவட்டச் செயலாளர் வீரையா, சிபிஎம் திருப்பு வனம் ஒன்றியச் செயலாளர் அய்யம் பாண்டி, சிஐபி மாவட்ட பொருளாளர் தட்சி ணாமூர்த்தி ஆகியோர் போராட்டக்காரர்க ளுடன் மறியலில் பங்கேற்றனர். பட்டியலினத்தைச் சேர்ந்த காளையா கொலை செய்யப்பட்டது தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட் டச் செயலாளர் வீரையா கூறுகையில், சிவ கங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பட்டிய லின மக்கள் வன்முறைக்கு உள்ளாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படுகொலைக்கு கார ணமானவர்கள் யார் என்று தெரிந்தும் அவர்கள் இதுவரைக்கும் கைது செய்யாத நிலை உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பட்டாசு ஆலையில் தீ விபத்து தொழிலாளி படுகாயம்
வெம்பக்கோட்டை, செப்.18- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள் ளது விஜயரங்காபுரம். இங்கு, தனியாருக்கு சொந்த மான ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலை உள்ளது. பட்டாசுக்கு தேவையான வேதிப் பொருட்கள் கலக்கும் பணி செய்து வருபவர் துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார்(50). இவர் வழக்கம் போல பணி முடிந்து உடலை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஜெயக்குமார் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
குடும்பத் தகராறு: 3 குழந்தைகளுடன் உணவில் விஷம் அருந்திய தாய்
விருதுநகர், செப்.18- விருதுநகரில் குடும்பத் தகராறு காரணமாக உண வில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்திய தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட் பட்டது மல்லிக்கிட்டங்கித் தெரு. இப்பகுதியைச் சேர்ந்த வர் ஜெகதீசன் (40). இவரது மனைவி கலையரசி(32). இவர் களுக்கு வினய்குமார் (12), நித்யா (11), திவ்யா (9) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். ஜெகதீசன் கரூரில் கட்டடப்பணி செய்து வரும் நிலை யில், கணவன் - மனைவியிடையே அடிக்கடி செல்போனில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கலை யரசி, கடையில் 4 பாக்கெட் எறும்பு பொடியை வாங்கி உணவில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் அதை உண்டுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் வீட்டின் கதவு திறக்கப் படாததை அறிந்த உறவினரான லட்சுமி கதவை தட்டி யுள்ளார். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை. இத னால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், கலையரசி குழந்தைகளுடன் மயங்கிய நிலையில் கிடந் தது தெரியவந்தது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் 4 பேரை யும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் போலீசார் சேர்த்தனர். பின்பு, நால்வரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விருதுநகர் ஊரக காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
தோட்டத்தில் மதுபாட்டில்கள்: 2 பேர் கைது
கடமலைக்குண்டு, செப்.18- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம் பட்டி பகுதியில் தனியார் தோட்டத்தில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கண்டமனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் ஜி.உசிலம்பட்டி - கதிர்நரசிங்கபுரம் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது ஜி.உசிலம்பட்டியைச் சேர்ந்த காட்டு ராஜா (48) என்பவருக்கு சொந்தமான தோட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் அட்டைப் பெட்டிகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 284 மது பாட்டில்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காட்டுராஜா மற்றும் அம்மா பட்டியை சேர்ந்த வைரம் (48) ஆகிய இரண்டு பேரை போலீ சார் கைது செய்தனர்.
தூக்குப் போட்டு ஒருவர் தற்கொலை
கடமலைக்குண்டு, செப்.18- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே தென்பழனி காலனியைச் சேர்ந்தவர் முத்தையா (52). விவசாயி. இவர் செவ்வாய்க்கிழமை மாலை மாடுகள் மேய்க்க செல்வ தாக கூறி, மயிலாடும்பாறை அருகே உள்ள அவரது தோட் டத்திற்கு சென்றிருந்தார். நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மகன் மலைச்சாமி தோட்டத்திற்கு சென்று தேடி பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த மரத்தில் முத்தையா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் இதுதொடர்பாக தகவலறிந்த கடமலைக்குண்டு போலீ சார், முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முத்தையாவின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை. எனவே முத்தையா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சப்- இன்ஸ்பெக்டரை அறைந்த இன்ஸ்பெக்டர்
கடமலைக்குண்டு, செப்.18- தேனி மாவட்டம் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் கண்ணன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்பான விசா ரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறி அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மலைச்சாமி இன்ஸ்பெக்டரி டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை யடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் கோபத்தில் மலைச் சாமி கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த தேனி போலீஸ் சூப்பிர ண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார். அதன் பேரில் புத னன்று ஆண்டிபட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் இன்ஸ்பெக்டர் கண்ணன் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமியுடன் விசாரணை மேற்கொண்டார். விசாரணை அறிக்கை போலீஸ் சூப்பி ரண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் தவறு செய்த வர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
சின்னாளப்பட்டி, செப்.18- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தாலுகா அளவிலான ஏழை - எளிய பள்ளி குழந்தைகளுக்கு கல்வி யை வழங்குவதில் சிறப்பாக செயலாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தனி யார் தொண்டு அமைப்பு விருது வழங்கியது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பிச்சைநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மருத்துவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குநர் காசிமாயன் வரவேற்றார். காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் காளிமுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரி பேராசிரியர் மகேந்திரபாண்டியன் ஆகி யோர் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினர். இதில், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.