நத்தம், ஜூன், 1
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை யில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகளுக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று வந்தார். தான் மதுவிலக்கு காவல்பிரிவில் பணிபுரிவதாக கூறிக் கொண்டு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தி ருப்பதாகவும், இதனால் கடைகளில் சோதனை நடத்த வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் தெரிவித்தார். இதனையடுத்து அவர் சில கடைகளிலும் சோதனை நடத்தினார். பின்னர் கடைகளின் உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதில் சந்தேக மடைந்த வியாபாரிகள், இதுதொடர்பாக நத்தம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேல வளவை சேர்ந்த தினகரன் (வயது 36) என்பதும், அவர் போலீஸ் துறையில் பணிபுரியவில்லை. போலீஸ் போல நடித்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி யில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து தினகரனை கைதுசெய்தனர்.