தனியார் கல்லூரி தாளாளர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
விருதுநகர், ஜூலை 9- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் செவிலியர் கல்லூரி தாளாளார் தாஸ்வின் ஜான்கிரேஸ் (40). இவர் கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவருக்கு பாலி யல் தொந்தரவு அளித்ததுடன், கைப்பேசி மூலம் ஆபாசப் படங்களை அனுப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த வழக்கானது, வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த வன்கொடுமை தடுப்பு நீதி மன்ற நீதிபதி கோபிநாத், தாஸ்வின் ஜான்கிரேசின் நீதி மன்ற காவலை வரும் ஜூலை 22 ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
பட்டா கோரி மனுக் கொடுக்கும் இயக்கம்
விருதுநகர், ஜூலை 9- விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக் கொடுக்கும் இயக் கம் நடைபெற்றது. விருதுநகர் அருகே உள்ளது கணபதி நகர் மற்றும் சூலக்கரை பகுதி. இங்குள்ள ஏழை, எளிய மக்கள் பலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இலவச குடிமனைப் பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேலு, ஒன்றியகுழு உறுப்பினர் ஜெ.ஜே.சீனிவாசன், எம். ஆறுமுகம், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக புகார்
இராமநாதபுரம், ஜூலை 9- முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு ஒற்றை தலைமை ஏற்க வலியுறுத்தி இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். அப்போது கூட்டத்திற்குள் புகுந்த சிலர் ஓபிஎஸ் வாழ்க என கோஷம் எழுப்பி நாற்காலிகளை தூக்கி எறிந்து ரகளையில் ஈடு பட்டனர். இது தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவா ளர்களுக்கு இடையே ஏற்பட்ட தாக்குதலில் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், கிளை செயலாளர்கள் சந்திரன், மணிபாரதி ஆகியோரின் மண்டை உடைந்தது. கூட்ட அரங்கிற்கு வெளியே நிறுத்தப் பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. காயம டைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இத்தாக்குதலுக்கு பின் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்ட அரங்கில் திடீரென நுழைந்து தாக்குதலுக்கு காரணமான முன்னாள் அமைச்சர் மணி கண்டனை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஏகமானதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அடியாட்களை அனுப்பி பிரச்சனை உரு வாக்கியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட செயலாளர் முனிய சாமி தலைமையில் அதிமுகவினர் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சத்யா பள்ளியில் வண்ணங்கள் தினவிழா
திருவில்லிபுத்தூர், ஜூலை 9- திருவில்லிபுத்தூர் பிள்ளையார் குளம் சத்யா வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளியில் பாலர் வகுப்பு மாணவ மாணவி களுக்கு வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் ரோட்டேரியன் குமரேசன், டாக்டர் சித்ரா, சிஇஓ அரவிந்த் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் அனு சியா, துணை முதல்வர் சௌந்தரபாண்டி என்ற சௌந்தரி, ஆலோசகர் பாரதி நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். மாணவர்கள் பல நிற உடைகள் அணிந்து அணி வகுத்து வந்தனர். நிறங்கள் தொடர்பான உணவுப் பொருட் கள், பூக்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டது. நிறங்க ளில் தன்மைகள் பயன்பாடுகள் குறித்து மழலையர்கள் தங்கள் மொழியில் எடுத்துரைத்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அதிகாரி அமுதா தலைமையில் பள்ளி ஆசிரிய, ஆசிரி யைகள், பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
ரூ.50 லட்சம் கேட்டு திண்டுக்கல் மில் அதிபர் கடத்தல் கடத்தல்காரர்களை பிடிக்க தில்லி சென்றது தனிப்படை
திண்டுக்கல், ஜுலை 9- திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டியில் திரு வல்லிக்கேணி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் வில்வபதி (வயது 54). இவர் சுக்காம்பட்டி அருகேயுள்ள கொண்டசமுத்திரபட்டியில் ஜெயகிருஷ்ணா ஸ்பின்னிங் மில் வைத்து நடத்தி வருகிறார். இவர் மில்லுக்கு தேவை யான பஞ்சு மற்றும் நூல்கள் வெளிமாநிலங்களில் இருந்து வாங்குவது வழக்கம். அப்படி வாங்கிய நூல்களை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தில்லியில் உள்ள சிவக்குமார் என்ற ஏஜெண்ட்டிடம் அறிமுகமாகி தங்க ளுக்கு 50 டன் நூல் பங்களாதேசுக்கு அனுப்ப வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஒரு கிலோ நூலின் விலை ரூ.205 வீதம் 50 டன்னுக்கு ஒரு கோடியே 25 லட்சம் என்று பேரம் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று தில்லி ஏஜெண்ட் சிவக்குமார் வில்வபதியை அழைத்துள்ளார். இதனையடுத்து மில் வேலைகளை மேலா ளர் சண்முகவேலிடம் ஒப்படைத்துவிட்டு கடந்த 5 ஆம் தேதி தனது கணக்காளர் வினோத்குமாருடன் மதுரை விமானம் மூலம் தில்லி சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி மில் அதிபர் வில்வபதி தனது மேலாளர் சண்முகவேலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பதற்றத்துடன் லோக்கலில் உள்ள லோடுகளை அனுப்பி வைக்க கூறியுள் ளார். இதனையடுத்து மில் அதிபர் வில்வபதி தனது மருமகன் தர்மபிரகாஷ், சம்மந்தி சிவக்குமாரிடமும் செல்போனில் தொடர்பு கொண்ட போது தில்லியில் மர்ம நபர்கள் தன்னை கடத்தி வைத்துக்கொண்டு ரு.50 லட்சம் கேட்டு மிரட்டுவதாக வும், மேலாளர் சண்முகவேலிடம் பணத்தை ரெடி பண்ணி கொடுத்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து சண்முகவேல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நூல் கொள்முதல் செய்வதற்காக மில் உரிமையாளர் வில்வபதியையும், வினோத்குமாரையும் அழைத்துச்சென்று ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி வருகிறார்கள் என்று சண்முகவேல் புகாரில் கூறி யுள்ளார். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக திண்டுக்கல் தாலுகா ஆய்வாளர் பாலாண்டி, மேற்கு காவல் ஆய்வாளர் ராஜ சேகரன், தாடிக்கொம்பு சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தல்காரர் களை பிடிப்பதற்காக தில்லி சென்றுள்ளனர். (நநி)
கன்னிவாடி பகுதியில் அறுவடைக்கு தயாராகும் வெள்ளைச்சோளம்
சின்னாளபட்டி, ஜூலை 8- கன்னிவாடி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் வெள்ளைச் சோளப் பயிர்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே ராமலிங்கம்பட்டி, மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் நூற்று கணக்கான ஏக்கர்களில் வெள்ளைச்சோளத்தை பயிரிட்டுள்ளனர். தற்போது அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கிளிகள் மற்றும், குருவிகள், மைனாக்களிடமிருந்து சோளப்பயிரை காப்பாற்ற விவசாயிகள் பல உத்திகளை கையாண்டு வருகின்றனர். தற்போது அப்பகுதியில் சோளப்பயிர் காற்றுக்கு ஆடும் காட்சி கண்கொள்ளா காட்சியாக உள்ளது.