districts

img

மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

திருவில்லிபுத்தூர், ஜூலை 24  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர தேர் திருவிழாவை முன்னிட்டு தெருக்கூத்து திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி  குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தேவேந்தி ரன் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சி விற்பனையில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், காரியாபட்டி, திருவில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மதுரை , திண்டுக்கல், திருச்சி, காஞ்சிபுரம் ,சென்னை ஆகிய  மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் தங்கள் உற்பத்தி  பொருட்களை காட்சிக்கு வைத்தனர்.