வெம்பக்கோட்டை, மார்ச் 16- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் தொல்லி யல் துறை மூலம் நடைபெற உள்ள அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ. மேகநாதரெட்டி, சாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோர்கள் முன் னிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து தெற்கே சுமார் 15 கிமீ தொலைவில் உள் ளது வெம்பக்கோட்டை. இங் குள்ள வைப்பாற்றின் இடது கரையில் அமைந்துள்ளது இந்த தொல்லியல் மேடு உள்ளது. அகழாய்வுப் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகை யில், இப்பகுதியானது, நுண்கற் காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் மேடாக சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்புடன் காணப் படுகின்றது. இந்நிலப் பரப்பா னது மேட்டுக்காடு அல்லது உச்சிக்காடு என்று அழைக்கப் படுகின்றது. தற்போது சமதளத்திலி ருந்து சுமார் 2 மீட்டர் உயரம் கொண்ட இந்த தொல்லியல் மேட்டில் இரும்பு காலத்தில் பயன் படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிக அளவில் காணப்படுகின் றது. மேலும் நுண்கற்காலக் கருவிகள் மற்றும் பல வகை யான பாசிமணிகள் மற்றும் சுடுமண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, மணி கள் மற்றும் சங்காலான வளை யல்கள் மற்றும் விரல் மோதி ரங்கள் மற்றும் சில்லு வட்டுகள் மற்றும் இரும்பு உருக்குக் கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சுடுமண்ணாலான உறைகிணறு மற்றும் குழாய்கள் மேற்பரப்பில் காணப்பட்டது. மேலும் முழுமையான மற்றும் முழுமைபெறாத சங்கு வளை யல்கள் மிக அதிகமாக கிடைக்கி றது. மேலும் பல வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக அருகில் அமைந் துள்ள விஜயகரிசல்குளம் கிரா மத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பி டத்தக்கது. எனவே, இந்த அகழாய்வின் மூலம் அதன் காலத்தையும், தமிழர்களுடைய தொன்மை யையும், பண்பாட்டினையும் அறிவதற்கு உதவும் என்று தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சி யர் புஷ்பா, தொல்லியல் துறை இயக்குநர் சிவனாந்தம், அருங் காட்சியகம் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள், வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங் கேற்றனர்.