districts

img

சிவகங்கையில் 498 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.42.26 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்

சிவகங்கை, டிச.11- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக  மாற்றுத்திறனாளிகள் தின விழா   மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலை மையில் நடைபெற்றது.இதில்  498 பயனாளிகளுக்கு ரூ.42.26 லட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்க ளையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்  றுத்திறனாளி குழந்தைகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகை யில், சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 21,264  மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்  கான நலத்திட்டங்களை வழங்கிட வழிவகை செய்  யப்பட்டுள்ளது. அதில், 17,030 மாற்றுத்திறனாளி களுக்கு வருவாய்த்துறையின் சார்பில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாதம் ரூ.2 ஆயிரம் பரா மரிப்பிற்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டு வரு கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது மாற்றுத்திற னாளிகளுக்கு உதவித்தொகையினை, வருகின்ற ஜனவரி 2023 முதல் ரூ.1,500 - ஆக உயர்த்தித் தருவ தற்கான ஆணையினையும் பிறப்பித்து அவர்களின் நலன் காத்துள்ளார். சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக திகழ்ந்திடும் வகையிலும், அவர்களை போற்றி டும் வகையிலும், அவர்கள் மனரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் பிறரைச் சார்ந்திருக்காமல் தன்சார்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்கா கவும் தமிழ்நாடு முதலமைச்சர்  மாற்றுத்திறனாளிகள் மீது தனிகவனம் செலுத்தி,அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி அவர்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். அத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் அதனை பயன்படுத்திக் கொண்டு பயன்  பெற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணி புரிந்த 7 பணியாளர்களுக்கு நினைவுப்பரிசுகளை யும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளி களில் சிறப்பாக பணிபுரிந்த 56 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும், மாற்றுத் திறனுடைய நபர்களுக்கான பொதுச்சேவை  புரிந்தமைக்காக 5 நபர்களுக்கு விருதுகளையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கி பாராட்டினார்.

  இந்நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.மாங்குடி, மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணி வண்ணன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கை  மாறன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  அலுவலர் கதிர்வேலு, மாவட்ட ஊராட்சி துணைத்  தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்  செந்தில்குமார் மற்றும் ஆரோக்கிய சாந்தாராணி, சிவகங்கை நகர்மன்றத் துணைத்தலைவர் கார்  கண்ணன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரி யம் உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்ட அமைச்சர் விழாவில் மாற்றுத்திறனாளிகள் அனைவ ருக்கும் விருதுகள் வழங்கி அவர்களோடு அன்போடு பேசி, பொறுமையாக குறைகளையும் கேட்டு அவற்  றுக்கு தீர்வு காண ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்து தீர்வு கண்டார் அமைச்சர் பெரியகருப்பன்.  அமைச்சர் பெரியகருப்பனின் செயல்பாட்டை மாற்றுத்திறனாளிகள் மனமுவந்து பாராட்டினர். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிற மாற்றுத்திறனாளிகள்  நலவாரிய உறுப்பினராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள புஷ்பராஜின் செயல்பாட்டை அங்கீகரித்து அவரை தமிழக முதல்  வர் அழைத்து பாராட்டியதை அமைச்சர் குறிப்பிட்டார்.