districts

img

மதுரை மாநகரில் வாலிபர் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா

மதுரை, ஜன. 18-  மதுரை மாநகரில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில் சமத்துவ பொங்கல்  விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பழங்காநத்தம் பகுதிக்குழு சார்பில் பைக்காரா பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு கிளைச் செயலாளர்கள்  பி. லோகேஷ் , எஸ். ஜீவகார்த்திகேயன் ஆகி யோர் தலைமை வகித்தனர். கிளைத் தலைவர் பிரித்திவிராஜ், துணைத் தலைவர் எஸ். ராஜ மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை பொருளா ளர் கே.ரோகித் சின்னா வர வேற்றார். மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடே சன், மதுரை மாநகராட்சி துணை மேயர்  டி.நாகராஜன், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் டி. செல்வராஜ்,  பகுதிக்  குழு தலைவர் சரவணன், செய லாளர் கௌதம்பாரதி, மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி தலை மை ஆசிரியர் சுகந்தி , மதுரை மாவட்ட அறிவியல் இயக்க செய லாளர் பாண்டியராஜன், பைக்  காரா ஊர் புற நூலகர் மோக னப்பிரியா,மாதர் சங்க  செயலாளர் காசு பாண்டி யம்மாள் ஆகியோர் போட்டி களில் பங்கேற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்திப்பேசினர்.

கிளை துணைத்தலைவர் பி.  தமிழ்செல்வன் நன்றி கூறி னார்.  அரசரடி பகுதிக்குழு சார்பில்  சம்மட்டிபுரத்தில்  பகுதிக்குழு பொருளாளர் முத்துமணி தலை மையில் விழா நடைபெற்றது. திமுக வட்ட பிரதிநிதி பாலாஜி முன்னிலை வகித்தார்.  துணை  மேயர் டி. நாகராஜன். 65 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சோலை செந்தில் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மேற்கு - 1 ஆம் பகுதிக்குழு செய லாளர் கு. கணேசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர்  டி.  செல்வராஜ், பொருளாளர் அ. பாவேல் சிந்தன், மாற்றுத் திறனாளிகளுக்கான  சங்க மாவட்டத் தலைவர் பி. வீர மணி, திமுக மாவட்ட பிரதிநிதி சுசி செல்வம், இளைஞரணி செயலாளர் ரவிக்குமார் ஆகி யோர்  விளையாட்டு போட்டி களில் கலந்துகொண்ட குழந்  தைகள் மற்றும் பெரியவர் களுக்கு பரிசுகள் வழங்கினர்.  முனிச்சாலை பகுதிக்குழு  அனுப்பானடி சிலம்ப பயிற்சி பள்ளி  சார்பாக  விழா நடைபெற் றது. 23 வது வார்டுமாமன்ற உறுப்பினர் டி. குமாரவேல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தெற்கு பகுதிக்குழு  செயலாளர் ஜெ.லெனின், வாலிபர்  மாவட்ட செயலாளர் டி.செல்வராஜ், துணை தலைவர் ச.வேல்தேவா ,செயற்குழு உறுப்பினர் சுரேஷ் சிலம்பக்கலை ஆசான்கள் பொ.கிருஷ்ணசாமி, வடிவேல், வாலிபர் சங்க பகுதிக்குழு தலை வர் கா.கண்ணன், செயலா ளர் லெனின் குமார், பொருளா ளர் செல்வா ஆகியோர் விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கள் வழங்கி வாழ்த்திப் பேசினர்.