districts

img

மதுரை புறநகர் பகுதிகளில் வாலிபர் சங்க பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு

இளம்பிள்ளை, ஏப்.27- கொளுத்தும் வெயிலில் கொள்கை உறுதியோடு மேற் கொண்டு வரும் வாலிபர் சங்கத் தின் சைக்கிள் பிரச்சார கோவை பயணக்குழுவிற்கு உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. “இளைஞர்கள் அனைவருக் கும் வேலை கொடு” என்ற முழக் கத்தோடு சென்னை, புதுச்சேரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 4  முனைகளிலிருந்து ஏப்.21 அன்று  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கினர். 4 பிரதான குழுக்கள் 3000 கி.மீ பயணம் செய்து மே 1  ஆம் தேதியன்று திருச்சியில் சங்க மிக்கின்றன. இதன் ஒருபகுதியாக கோவையிலிருந்து துவங்கிய சைக் கிள் பிரச்சார பயணக்குழு, சேலம்  மாவட்டம் சங்ககிரியை அடுத் துள்ள  சன்னியாசிபட்டி ஊராட்சி பகுதிக்குள் நுழைந்தது. அங்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம், இந்திய மாணவர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய மற்றும் பல்வேறு தொழிற் சங்கத்தின் சார்பில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு மண்டபத் தில், சைக்கிள் பிரச்சார பயணக் குழு மலர்தூவி மரியாதை செலுத் தியது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயலாளர் மேவை.சண்முக ராஜா தலைமையில் சைக்கிள் பேர ணியில் கலந்து கொண்ட வாலிபர் களை வாழ்த்தி, வரவேற்று பேர ணியின் நோக்கம் குறித்து  பேசி னார்.  இதன்பின் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந் நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர், தாலுகா குழு உறுப்பி னர் பழனிசாமி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி, விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், சங்ககிரி பேரூராட்சி மன்ற உறுப் பினர் மாணிக்கம், மாதர் சங்க  மாவட்ட பொருளாளர் ஜெயலட் சுமி, மாணவர் சங்க மாவட்ட தலை வர் எஸ்.பவித்ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

இதேபோல், நாமக்கல் மாவட் டத்திற்குள் நுழைந்த வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சார பயணக் குழுவிற்கு வெப்படை, குமாரபா ளையம் உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. வெப்படை பேருந்து நிறுத்தத் தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எம்.மணி கண்டன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய மாண வர் சங்கத்தின் சார்பில், சன்னியா சிபட்டி ரயில்வே கேட் அருகில் சைக்கிள் பயணக்குழுவிற்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் பிரபு, கோகுல், விஷ்ணு, சூர்யபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.