districts

img

அஞ்சல் வாக்கு 100 சதவிகிதம் பதிவாவதை உறுதிப்படுத்துங்கள்

சென்னை, ஏப்.14- 2024 மக்கள வைத் தேர்தல் அலுவலர்களுக் கான அஞ்சல் வாக்குகளை வழங்குவதில் சுணக்கம் மற்றும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் அலுவலர்கள் அஞ்சல் வாக்குகளை 100 விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ‘ஜாக்டோ-ஜியோ’ கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கு. வெங்கடேசன், கு. தியாகராஜன் ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து  கடிதம் அளித்தனர். “காவலர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதைப் போல், தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு தேர்  தல் பணிச் சான்றிதழ், அஞ்சல் வாக்குகளை பதிவிடு வதற்கான நடவடிக்கைகளை, தேர்தல் பணிக்கு செல்லும்  முன்பாகவே- வரும் 17ஆம் தேதி சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களின் வாக்குப் பதிவை  உறுதிப்படுத்தும் விதமாக உரிய அனுமதி அளித்து, அனைத்து தேர்தல் அலுவலர்களின் அஞ்சல் வாக்கு களையும் உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.