districts

img

திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திண்டுக்கல், நவ.5- திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியின் 32வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது.  இக்கல்லூரியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற விழாவிற்கு கல்லூரியின் நிறு வனர் முனைவர் கே.வி.குப்புசாமி தலைமை வகித்தார். பல்கலைக்கழக அளவிலான தேர்வில் டெக்ஸ்டைல் துறையில் சாதனை புரிந்த மாணவிகள் குருசித்ரா, ரம்யா, வேளாண்மைத்துறையில் சாதனை புரிந்த  மாணவிகள் பிரியதர்ஷினி, சுருதி ஆகி யோரை பாராட்டி கல்லூரி நிறுவனர் கே.வி. குப்புசாமி தங்க நாணயங்கள் பரிசாக வழங்கினார். திண்டுக்கல் ஆட்சியர் முனை வர் விசாகன் கலந்து கொண்டு 1500 மாண வர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.  மேலும் முன்னாள் ஐ.ஏ.எஸ். ஆதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.வி.எஸ். கல்விக்குழுமத்தின் ஆலோசகர் பி.கே.பத்ரி, ஆர்.வி.எஸ். கல்விக்குழுமத்தின் இயக்கு  நர் முனைவர் வி.கிருஷ்ணகுமார், முதன்மை செயல் அதிகாரி வேணுகோபால் முருகதாஸ், ஆர்.வி.எஸ். கல்லூரிகளின் முதல்வர்கள் ஏ.பி.ஜெகதீசன், ராஜ்குமார், ரஞ்சித், உமாபிரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.         (ந.நி.)