கோவை, நவ.28- தமிழகத்தில் தற்போது வரை 68 மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத் தப்பட்டு, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 760 பேருக்கு பணி ஆணை வழங்கப் பட்டுள்ளது என பொள்ளாச்சியில் தமி ழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் பொள்ளாச் சியில் உள்ள நாச்சிமுத்து பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை யில் நடைபெற்றது. இம்முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணே சன் கலந்து கொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இதுவரை நடந்த 68 மெகா முகாம்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 760 பேருக்கு வேலைவாய் ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 234 தொகு திகளிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் முகாம்கள் நடத்தி வேலைவாய்ப்பை பெற்று கொடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. “நான் முதல்வன்” இணைய தளத்தை அனைவரும் பார்க்க வேண் டும். அந்த இணையதளத்தில் எங்கு படிப்பது, எதை படிப்பது எப்படி படிப் பது, எந்த பயிற்சி நிறுவனத்தில் படிக்க வேண்டும். படிப்பதற்கு, பயிற்சி பெறுவ தற்கு எங்கு உதவித்தொகை பெற வேண்டும் என்ற முழு விவரமும் உள்ளது. தமிழக முதல்வர் வெளிநா டுகளுக்கு சென்று ஆயிரக்கணக்கான முதலீடுகளை பெற்று கொண்டு வந்து வேலைவாய்ப்பை பெருக்கும் நிலையை உருவாக்கி கொண்டி ருக்கிறார். இங்கு 220க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் உள்ளது. வேலையை எடுத்துக் கொண்டால் 30 ஆயிரம் பேருக்கு வேலை உள்ளது. ஆனால், 2 ஆயிரம் பேருக்கு தான் வேலை கிடைக்கும். ஏனென்றால் அந்த நிறுவனங்களுக்கு தேவையான தகுதி, பயிற்சி இல்லை. இதனால் தான் திறன்மேம்பாட்டு பயிற்சி பெற்றால் வேலை கிடைக்கும், என்றார். இந்த முகாமில் மொத்தம் ஆயி ரத்து 27 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திறன் மேம்பாட்டு துறை இயக்குநர் வீரராகவராவ், பொள்ளாச்சி சார் ஆட்சி யர் பிரியங்கா, நகராட்சி தலைவர் சியா மளா நவநீதகிருஷ்ணன், உதவி ஆட்சி யர் (பயிற்சி) சவுமியா ஆனந்த், தொழி லக பாதுகாப்பு துறை இயக்குநர் செந் தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.