தஞ்சாவூர், ஏப்.28- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சி யர் சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் விவசாயிகள் பேசு கையில், ‘‘கோடை சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளதால் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் நடுவே பல இடங்களில் உருவாகியுள்ள குறுங்காடுகளால் நீரோட்டம் தடை படுகிறது, எனவே அந்த குறுங்காடு களை அகற்ற வேண்டும். செங்கிப்பட்டி பகுதிகளில் கிராவல் மண் கொள்ளை நடைபெறுகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த சட்டமன்ற கூட்டத்தொ டரில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங் கிணைப்பு சட்டத்தால், நீர் நிலைகள் தனியாருக்கு தாரை வார்க்கப் படலாம், இதனால் தனியார் அத்து மீறல்களால் நீர் நிலைகள் பறி போய் விவசாயம் பாதிக்கப்படும், எனவே இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தனியார் உரக்கடைகளில் உரங் களை வாங்கும்போது எந்த சாதி எனக் கேட்டு பட்டியல் தயாரிக்கப் படுகிறது. இதனால் சாதி மோதல் கள் உருவாக வாய்ப்புள்ளதால், அதனை தவிர்க்க மாவட்ட நிர்வா கம் பரிந்துரை செய்ய வேண்டும். கடந்தாண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப் பீடு தொடர்பான அறிக்கை களை இன்சூரன்ஸ் நிறுவனம் வெளிப்படையாக இணையதளத் தில் வெளியிட வேண்டும். விவசாயப் பணிகளுக்கு தொழி லாளர்கள் பற்றாக்குறை ஏற்படு கிறது. எனவே விவசாயப் பணி களுக்கு அவர்களை பயன்படுத் தும் வகையில் நூறு நாள் வேலைத் திட்டத்தை சேர்க்க உரிய நடவடிக் கையை எடுக்க வேண்டும். மதுக்கூர் கல்யாண ஓடை வாய்க்கால்களில் ரெகுலேட்டர் கள் இல்லாமல் ஆங்காங்கே காணப் படுகிறது. எனவே ரெகுலேட்டர் களை உடன் பொருத்த வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர்.