districts

திண்டுக்கல் மாவட்டத்தில் விளை நிலங்களை அழிக்கும் வன விலங்குகளை தடுத்திடுக!

திண்டுக்கல், ஜன.31 திண்டுக்கல் ஆட்சியர் வளாகத்தில் விவ சாயிகள் குறைதீர் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயி கள் பெரும்பாலனவர்கள் பங்கேற்றனர். ஆனால் அதிகாரிகள் மிகவும் தாமதமாக வந்தனர். மேலும் வனத்துறை, மின்சாரத்  துறை, உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த  அதிகாரிகள் பங்கெடுக்கவில்லை. இத னால் விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க அதிகாரிகள் இல்லாத நிலையே நீடித்தது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார் பாக மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி பேசு கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்  பம்பட்டி ஒன்றியம், பழனி ஒன்றியம் பகுதி யில் உள்ள கிராமங்களில் மக்காச்சோளம், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் விளைந்  துள்ளன. இதனை காட்டுப்பன்றிகள் நாசம் செய்கின்றன. குஜிலியம்பாறை, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுமாடுகளும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் உள்  ளிட்ட காட்டு விலங்குகளும் பயிர்களை சேதப்  படுத்துகின்றன. இந்த காட்டு விலங்குகளை தடுத்து பயிர்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை நிர்வாகமும் முன்  வர வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர  வேண்டும். மேலும் இந்த பிரச்சனைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால் விவசாயிகளைத் திரட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் ஈடு படும் என்றார்.

இது குறித்து பதில் அளிக்க வனத்துறை அதிகாரிகள் அங்கு இல்லை. இதனை யடுத்து வேளாண் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் அளித்த பதிலில், வனத்துறை மற்றும் விவசாயிகள் அடங்கிய ஒரு கூட்  டத்தை விரைவில் நடத்துவதாக தெரிவித்தார்.  ரூ.5 கோடி கட்டணக்கொள்ளை  கடந்த 6 மாதமாக நடைபெற்று வரும் கூட்டங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வரும்  ஒரு பிரச்சனை ஒட்டன்சத்திரம் நகராட்சி மாட்டு சந்தை பிரச்சனை ஆகும். இந்த சந்  தைக்கு வாரத்திற்கு 10 ஆயிரம் மாடுகள் வரு கின்றன. ஒரு வாரத்திற்கு 40 லட்சமும், ஆண்டுக்கு 5 கோடி ரூபாயும் சுங்க வரி என்ற பெயரால் கொள்ளை நடைபெறுகிறது. இது  குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய காலத்தில் இதற்கு தீர்வு காணப்பட வில்லை என்றால் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று ராமசாமி பேசி னார். ஒன்றியத்தலைவர் எம்.கருணாகர னும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார். ஆனால் மாவட்ட ஆட்சியர் இது தொடர் பாக எந்த பதிலும் அளிக்கவில்லை

பழனி வெடிமருந்து தொழிற்சாலை

பழனி வடக்கு தாதநாயக்கன்பட்டியில் 250 ஏக்கர் நிலத்தில் சுவா வெடிமருந்து தொழிற்சாலை அமைய உள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்  பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இது  குறித்து கேட்கும் போது ஒன்றிய சுற்றுச் சூழல் அனுமதிக்காக காத்திருப்பதாக தெரி விக்கிறீர்கள். இதில் தமிழக அரசின் நிலை யை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. இதற்கு ஆட்சியர் பதில் சொல்லவில்லை. 

தக்கல் மின் இணைப்பு என்னாச்சு

கடந்த குறை தீர் கூட்டத்தில் விளம்பர விவசாயி என்று பேசியது விவசாயிகள்  மனதை புண்படுத்துவதாக உள்ளது.  எனவே அதை ஆட்சியர் திரும்பப்பெற வேண்டும். 2022ல் தட்கல் முறையில் மின்  இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயி களுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும். இதற்கு பதில் அளிக்க மின்சா ரத்துறை அதிகாரிகள் வரவில்லை. இதனை யடுத்து பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் விசாகன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.  போடுவார்பட்டி பகுதியில் தரமற்ற சூரியகாந்தி விதை விநியோகம் செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் கேட்ட போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வாங்கித்தருவதாக ஆட்சியர் உறுதியளிததார். ஆனால் இன்று வரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆட்சி யர் விசாகன் பதிலளித்தார்.

வைகை உபரி நீரை  கொண்டு வருக!

விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பெருமாள் பேசுகையில், திண்டுக்கல் கிழக்கு பகுதியில் நீர்ப்பாசன நடவடிக்கையை மேற்கொள்ளும் வகை யில் சந்தானவர்த்தினி ஆற்றின் குறுக்கே சிறிய தடுப்பணைகள் கட்ட வேண்டும்.  வைகையிலிருந்து கால்வாய் அமைத்து உபரி நீரை கொண்டு வந்து திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் உள்ள குளங்களில் நிரப்ப வேண்டும். பழனி வரதமாநதி உபரி நீரை கருங்குளத்திற்கு கொண்டு வந்து அப்பகுதியில் சிறிய தடுப்பணைகளை கட்ட வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சி முருகபவனம் குப்பை கிடங்கில் அடிக்கடி  தீ வைப்பதால் அந்த தீயின் புகையால்  அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு களை உண்டாக்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் பாதிப்புக் குள்ளாகிறார்கள். எனவே இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்  டும் என்று வலியுறுத்தினார். 

கோதாவரி-காவிரி இணைப்பு

தமிழர் தேசிய முன்னணி சார்பாக விவ சாயி வீரப்பன் பேசுகையில். திண்டுக்கல் மாவட்டம் கடுமையான வறட்சி மாவட்ட மாகும். எனவே கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை அமலாக்க வேண் டும். கோதாவரி உபரி நீரை கரூரில் உள்ள புஞ்சை புகழுரில் காவிரியுடன் இணைத்து  திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம் பாறை உள்ளிட்ட பல வறட்சி பகுதிகளில் உள்ள குளங்களில் நீர் நிரப்ப அரசு முன்வர வேண்டும் என்றார்.           (ந.நி.)