districts

img

மதுரை ஆட்சியரிடம் விவசாயத்தொழிலாளர் சங்கம் கோரிக்கை மனு

மதுரை,மே 12- மதுரை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஏற்பட்டுள்ள சில பிரச்சனைகளை தீர்க்க தகுந்த நட வடிக்கை எடுக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேர்முக  உதவியாளரிடம்  மனு அளிக்கப்பட் டது. அந்த மனுவில் ,  தொழிலாளர்கள் காலை 7 மணிக்கு வரவேண்டும். போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை சரிசெய்ய வேண்டும். விவ சாயத் தொழிலாளர்களுக்கு 2022ஆம் ஆண்டிற்கான வேலை அட்டை இன்னும் முழுமையாக வழங்க வில்லை. புதிய வேலை அட்டை வழங்கும் போது வீட்டுவரி, குழாய்  வரி செலுத்திய  ரசீதை காட்டினால் தான் புதிய அட்டை வழங்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் கட்டா யப்படுத்துவது நிறுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு நிச்சயித்துள்ள சட்டக்கூலி முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டப்படி ஒவ்வொரு .  குடும்பத்திற் கும் நுாறுநாள் வேலை வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் பணித்தள பொறுப்பா ளர்கள் நுாறுநாள் வேலை செய்து முடித்தபிறகும் அவர்களே பல ஆண்டு களாக பணித்தளப் பொறுப்பா ளர்களாக தொடர்வதை நீக்கி  தகுதி யான தொழிலாளர்களை சுழற்சி முறை யில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அலங்காநல்லூரில் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை. உடனடியாக சம்பளம்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த மனுவை சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.உமா மகேஸ்வரன், மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன், துணைத் தலை வர் எல்.கெளசல்யா, துணைச் செய லாளர் து.ராமமூர்த்தி, நாகராஜ் ஆகி யோர் மனு அளித்தனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லையெனில் விவசாயத்தொழிலா ளர்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.