சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறை செப்டம்பர் 28 அன்று மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதனன் ரெட்டி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திமுக மாவட்ட துணைச் செயலாளரும் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவருமான மணிமுத்து,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.