districts

img

சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு மின் விளக்கு வசதி

 சிவகங்கை,ஜூன் 23- சிவகங்கை நகர பேருந்து நிலையம் கடந்த 10ஆண்டுகளாக இரவு நேரத்தில் இருளில் இருந்தது. கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவுறித்தல் படி மின் விளக்குகள் பொருத்த உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டு நகர் மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த் 50 மின் விளக்குகளை துவக்கி வைத்தார். இவ்விழாவில் நகராட்சி ஆணையாளர்(பொ) பாண் டீஸ்வரி,நகராட்சி மேற்பார்வையாளர் நவனித கிருஷ்னன்,நகர் மன்ற உறுப்பினர்கள் சரவணன், விஜயகுமார் மற்றும் நடைபாதை வியாபாரிகள் ஏரளமானோர் கலந்து கொன்டனர்.. நடைபாதை விற்பனை யாளர்கள் நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த்க்கு நன்றியை தெரிவித்து சால்வை அணிவித்தனர்.