districts

img

விருதுநகர் -அருப்புக்கோட்டை வழியாக மின்சார ரயில் சோதனை ஓட்டம்

விருதுநகர், மார்ச்.6- விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை  செல்லும் ரயில் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து அருப்புக் கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வழியாக மானாமதுரை, காரைக்குடி வரை செல்லும் ரயில் தடம் உள்ளது. இந்த வழித்தட மானது, மீட்டர் கேஜ் பாதையிலி ருந்து அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு தற்போது அவ்வழியே ரயில்கள் சென்று வந்தன. இந்நிலையில், அவ்வழியில் மின்சார பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், மின்சார ரயில் சோதனை ஓட்டமா னது ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. முதற் கட்டமாக, விருதுநக ரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை இந்த சோதனை நடைபெற்றது. இதில் கலந்த கொண்டு ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாது காப்பு ஆணையாளர் ஏ.கே. ராய், அருப்புக்கோட்டையில் ரயில்வே மின்சார துணை நிலையத்தை திறந்து வைத்தார்.   அருப்புக்கோட்டை நகர் மற் றும் சுற்றுவட்டார பகுதி மக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையாக விளங்கி வந்த மின்சார ரயில் சேவை, தற்போது தொடங்கப் பட்டுள்ளது. இதனால், இவ் வழியே ஏராளமான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.