இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூர் தலைவராக டி.ராஜா, துணைத்தலைவராக எம்.நம்புராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவராக சேங்கைமாறன் தேர்வு செய்யப்பட்டார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர்மன்ற துணைத் தலைவராக மதிமுகவின் கே.ஏ.எம்.குணசேகரன் தேர்வுசெய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி தலைவராக திமுக சார்பாக 11-ஆவது வார்டில் வெற்றி பெற்ற சேக் சிக்கந்தர் தேர்வு செய்யப்பட்டார்.துணை தலைவராக 13-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் மகேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு பேரூராட்சித் தலைவராக சிதம்பரம் பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு செயல் அலுவலர் தன்ராஜ், தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி, ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவராக பிரதிபா கனகராஜூம், துணைத் தலைவராக ஆனந்தி பாரதிராஜாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு செயல் அலுவலர் நந்தகுமார், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முருகேசன், ஆசிரியர் காசிராஜன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவராக சகிலா தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு செயல் அலுவலர் விஜயா உள்ளிட்ட அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கன்னிவாடி பேரூராட்சி தலைவராக தனலெட்சுமி தேர்வு செய்யப்பட்டார். செயல் அலுவலர் யுவராணி, தலைமை எழுத்தர் முத்துராமன், நகர செயலாளர் சண்முகம், சிபிஎம் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சக்திவேல் வாழ்த்து தெரிவித்தனர்