மதுரை, ஆக.31- மதுரை மாநகராட்சி லாரி ஒப்பந்ததாரர் விநியோகம் செய்வதை நிறுத்தியதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வியா ழக்கிழமை காலை பல மணி நேரம் தண்ணீர் கிடைக்கா மல் நோயாளிகள் தவிப்புக் குள்ளாயினர் ராஜாஜி மருத்துவமனை யில் வியாழக்கிழமை காலை யிலிருந்தே தண்ணீர் வர வில்லை உள்நோயாளிகள் மற்றும் அவர்களது உதவி யாளர்கள் எனப் புகார் தெரி வித்தனர். இது குறித்து மருத்துவ மனை முதன்மையர் ஏ.ரத்ன வேல் கூறுகையில், “தண் ணீர் தட்டுப்பாடு காரணமாக வியாழக்கிழமை காலை சில பிரச்சினைகள் ஏற்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதி காரிகளுக்குத் தெரிவிக்கப் பட்டது. பிற்பகலில் பிரச்ச னைக்குத் தீர்வு காணப்பட் டது என்றார். மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன்குமார் கூறு கையில், “ராஜாஜி மருத்துவ மனைக்குத் தினசரி 17 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. வியா ழக்கிழமை காலை தண்ணீர் விநியோகத்தில் சிறிது தடங் கல் ஏற்பட்டது, ஆனால் மருத்துவமனை நிர்வாகம் பிரச்சனையைச் சுட்டிக் காட்டியதை அடுத்து, காலை 9.14 மணியளவில், தெப்பக் குளம் நீரேற்று நிலையத்தி லிருந்து கூடுதல் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு, ராஜாஜி மருத்துவமனைக்குக் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது” என்றார். மாநகராட்சி அதிகாரி கள் கூறியதாவது: மாநகராட்சி குடிநீரேற்று நிலையங்களிலிருந்து தனி யார் லாரி ஒப்பந்ததாரர் மூலம் தினமும் 30 லாரிகள் மற்றும் 32 டிராக்டர்கள் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனை, நீதிமன்றம், டிஆர்ஓ காலனி, ஆட்சியர் அலுவலகம் உள் ளிட்ட அரசு வளாகங்களுக் குத் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர். பணம் வழங் கப்படாததால், ஆகஸ்ட் 31-ஆம் முதல் விநியோ கத்தை நிறுத்தப் போவதாக ஒப்பந்ததாரர் தெரிவித்தி ருந்தார். இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை ஒப்பந் தம் புதுப்பிக்கப்படும் என்றும் ஆனால், 2021-ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தத்தை நீட்டிக்க வில்லை அல்லது புதுப்பிக்க வில்லை என்றும் கூறப்படு கிறது.