districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரை மண்டலம் 4 -2 இல்  குடிநீர் விநியோகம் நிறுத்தம்

மதுரை, மே 27-  மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள குலமங்கலம் சாலை - தாகூர் நகர் சந்திப்பில் முல்லை பெரியாறு குடி நீர் திட்டத்தில்  குழாய் பதிக்கும் அமைக்கும் பணி நடை பெற உள்ளது.  இதற்காக மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் எண். 2 மற்றும் 4 இல்  உள்ள வைகை வடகரை பகுதி களான செல்லூர், மதிச்சியம், அருள்தாஸ்புரம், ரேஸ்கோர்ஸ், ரிசர்வ் லைன், கே.கே.நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளுக்கு மே 29, 30 (திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி பொறியாளர் பிரிவு சார்பில் அறி விக்கப்பட்டுள்ளது .மேற்கண்ட இரண்டு தினங்கள் பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்  படுகிறது.

அனுமதியின்றி பட்டாசு ஆலை நடத்தியவர் மீது வழக்கு ஒருவர் கைது

விருதுநகர், மே 27- விருதுநகர் அருகே உள்ளது மல்லநாயக்கன்பட்டி. இங்கு சேகர் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.  அதில் அரசு அனுமதியின்றி பட்டாசு ஆலை செயல்பட்டு  வந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சமயன் அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த தயார் செய்யப்பட்ட பட்டாசுகள், மூலப்பொருட்கள் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு ஆலை நடத்த இடம் கொடுத்த சேகர்,  ஆலை உரிமையாளர் திருத்தங்கல்லைச் சேர்ந்த ராஜ சேகர், போர்மென் ஆறுமுகசாமி ஆகியோர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆறுமுகசாமியை கைது செய்தனர்.

ஆசிரியர் உட்பட 2 பேர் போக்சோவில் கைது

தேனி, மே 27- தேனி அருகே வலையபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி(56), தனியார் பள்ளி ஆசி ரியர் பகவதிராஜ்(55). இருவரும் இதே ஊரைச் சேர்ந்த  11 வயது சிறுமியிடம் அடிக்கடி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சிறுமி தேனி அனைத்து மகளிர்  காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.இதனடிப்படை யில் இருவரையும் போக்சோ சட்டத்தில் ஆய்வாளர் உஷா  கைது செய்து சிறையில் அடைத்தார்.

நத்தம் அருகே வாகனங்கள் மோதி ஒருவர் பலி 

நத்தம், மே 27- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டி யை சேர்ந்தவர் முகமதுயாசின் (27). கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பரளிநோக்கி சென்று கொண்டிருந்தார். வலையபட்டி பிரிவில் மதுரை யில் இருந்து வந்த மினிவேன்  இருசக்கர வாகனம் மீது  மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்  காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  முக மது யாசின் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்  ஆய்வாளர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினார்.

குளிர்சாதனப் பெட்டி  வெடித்து தீ விபத்து

சாத்தூர், மே 27- சாத்தூர் அருகே மேட்டமலையில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள மேட்ட மலையைச் சேர்ந்தவர் பரமானந்தம். கட்டிடத் தொழிலாளி யான இவர், குடும்பத்துடன் ஒரு வீட்டில் வசித்து வரு கிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி சனிக்கிழமையன்று மதியம் மின் கசிவு காரண மாக திடீரென வெடித்தது. இதையடுத்து, அதிலிருந்து வெளியேறிய தீயானது, வீடு முழுவதும் பரவியது. தகவ லறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடித் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. குளிர்சாதனப் பெட்டி வெடித்த போது  வீட்டிற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை சிறப்பு முகாம்

விருதுநகர், மே.27- விருதுநகர் மாவட்ட தடுப்பூசி மையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகியவை இணைந்து சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. குழந்தை நல இருதய நோய் நிபுணர் சரண்யா கலந்து  கொண்டு பரிசோதனை நடத்தினார். இம்முகாம் மூலமாக  விருதுநகர் சுகாதார மாவட்டம் மற்றும் தனியார் அமைப்பு  சார்பில் என சுமார் 100 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் 20 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். அறுவை  சிகிச்சையாது, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை யிலும், அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்ச ரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலும் செய்  யப்பட உள்ளன.