மதுரை, அக்.11- மதுரை கோட்ட நிர்வா கம் ரயில்வே கேட்டுகளில் காண்ட்ராக்ட் அடிப்படை யில் பணியாளர்களை நிய மனம் செய்யும் முயற்சி யினை கைவிடு வேண்டும். ரயில் பயணிகளின் பாது காப்பில் அலட்சியம் செய்ய கூடாது. நிரந்தர தொழிலா ளர்களை கேட் டூட்டியில் இருந்து எடுக்காதே. படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். மக்கள் விரோத, தொழிலாளர் விரோத தனியார் மைய கொள்கைகளை கண்டித்து மதுரை ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் அலுவ லகம் முன்பு தட்சிணா ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் துணைத் தலைவர் பி.வினோத்பாபு தலைமை வகித்தார். ஓபன் லைன் செய லாளர் சி.காட்டு ராஜா முன் னிலை வகித்தார். உதவி கோட்டச் செயலாளர் ஜெய ராஜ சேகரன், கோட்டத் துணைத் தலைவர் ஆர்.சங்க ரநாராயணன், விருதுநகர் கிளை பொருளாளர் பாரதி ராஜா, விருதுநகர் கிளைச் செயலாளர் விக்னேஸ்வ ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.