மதுரை, டிச.11- டாக்டர் அம்பேத்கரின் 66-ஆவது நினைவு நாளை யொட்டி மதுரையில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் டாக்டர் அம்பேத்கர் மற்றும் ‘தலித் பேந்தர் இந்தியா’ (DPI) அமைப்பாளர் மலைச்சாமி ஆகி யோர் ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு வழக்கறிஞர் கே. சீம ராஜ் தலைமை வகித்தார். சமூக செயற்பாட்டாளர் எம். தேவேந்திரன் முன்னிலை வகித்தார். மக்கள் விடுதலைக்கட்சி நிறுவனரும் முன்னாள் எம்எல்ஏவுமான சு.க.முருகவேல்ராஜன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வெ. கனியமுதன், உயர்நீதிமன்ற உதவிப் பதிவாளர் அ. விஜயன், மதுரை மாமன்ற 71-ஆவது வார்டு உறுப்பினர் இன்குலாப் (எ) முனியாண்டி, மூவேந்தர் புலிப்படைத் தலைவர் செ. பாஸ்கர், தமிழர் தேசியக் கழகம் தலை வர் மு.க.வையவன், மருதநாட்டு மக்கள் கட்சித் தலை வர் பனை. ராஜ்குமார், வழக்கறிஞர்கள் வெ. திருமால், கே.குமரதேசிகன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.