இராமநாதபுரம், ஏப்.16- சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 132 வது பிறந்த தின கருத்தரங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி கிளையின் சார்பாக நடைபெற்றது. கிளைத் தலைவர் க கருணாநிதி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் த.முத்துலட்சுமி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் டாக்டர் வான் தமிழ் இளம் பரிதி துவக்கி வைத்து பேசினார்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகி சுரேஷ்குமார் கருத்துரை யாற்றினார். மாவட்டத் துணைச் செயலாளர் என். கலை யரசன், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கே.கே.கதிரவன், வழக்கறிஞர்கள் பா.கோபால் பாண்டி, கிருஷ்ணமூர்த்தி.பிரதீப், வங்கி மேலாளர் திருமுருகன், பொறியாளர் விவேக் ஆகியோர் பேசினர்.