districts

img

அய்யம்பாளையத்தில் இரட்டைமாட்டு வண்டி பந்தயம்

சின்னாளப்பட்டி, ஜன.22- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியில் திமுக பேரூர்  கழகம் சார்பில் அமைச்சர் பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடை பெற்றது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் பெரிய மாடு, நடுமாடு, பூஞ்சிட்டு ஆகிய மூன்று பிரிவின் கீழ் நடைபெற்றது.  பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் வென்ற  வீரர் களுக்கு  ஒரு லட்சம்  ரூபாய் , நடுமாட்டு பந்தயத்தில் வென்றவர்களுக்கு ரூ.75 ஆயிரம்,  பூஞ்சிட்டு மாட்டு பந்தயத்தில் வென்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.