நெல்லை மாநகராட்சி 54 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கருப்பசாமி, தியாகராஜநகர் பகுதியில் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது சிபிஎம் தோழர்கள் பா.வரகுணன்,சுப்ரமணியன், திமுக நிர்வாகி செல்லக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட 10வதுவார்டில் மார்க்சிஸ்ட்கட்சி சார்பில் போட்டியிடும் டி ஆர் பின்னி போஸ்கோ வுடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என் .முருகேசன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நல்லூர் பேரூராட்சியில் 5வது வார்டு சிபிஎம் வேட்பாளர் கணேசனுடன் வாக்கு சேகரிப்பில் மாவட்ட குழு உறுப்பினர் ஜாண் தலைமையில் வட்டார குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 8ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் கே.மோகன் வீடு வீடாகசென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் மூவேந்தர் நகர், புன்னை நகர், காமராஜர் சாலை, கூத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 33 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஜே. பாஸ்கா மேரியுடன் வாக்கு சேகரிப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பாகோடு பேரூராட்சி 13-ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வனஜா ஜெறோம் வாக்குச்சேகரித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் லீமாறோஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திற்பரப்பு பேரூராட்சி 7 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், திருநந்திக்கரை, வியாலி, திட்டவிளை பகுதிகளில் ஞாயிறன்று (பிப்.13) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.