மதுரை, ஜூலை 2- கடன் வாங்குவதற்கு (லோன் ஆப்) கடன் செயலிகளை பயன்படுத்த வேண் டாம் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர பாபு கேட்டுக் கொண்டுள்ளார். சனிக்கிழமையன்று மதுரையில் செய்தி யாளர்களிடம் காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு கூறியதாவது: கஞ்சா கடத்தலைத் தடுப்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட 2,200 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்கி, சொத்துக் களைப் பறிமுதல் செய்துள்ளோம். இவர்களில் 200 பேர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்க த்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மோப்ப நாய்கள்
ரயில்களில் திருட்டுத்தனமாக கடத்தப்படும் கஞ்சா பார்சல்களை அடையாளம் காண மோப்ப நாய்களை ஈடுபடுத்த மாநிலக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
கடன் செயலிகள்
கடன் வாங்குவதற்கு லோன் ஆக்களை (செயலிகளை) பயன்படுத்த வேண்டாம் என்றும் காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு எச்சரித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கடன் வழங்குபவர்கள் கடன் கேட்பவர்களின் புகைப்படங்கள், கை பேசி எண்களை கேட்டுப் பெறுகின்றனர். கடனை வழங்குபவர்கள், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை அச்சு றுத்துகிறார்கள். கடன் வாங்கியவர் களைப் பற்றி தவறான செய்திகளை அனுப்புகிறார்கள். கடன் வழங்குபவர்கள், “கடன் செலுத்த முடியாதவர்களின் புகைப் படங்களை மார்பிங் செய்கின்றனர், அவர்கள் பெண்கள் அல்லது ஆண்களு டன் இருப்பது போல் புகைப்படத்தைப் பகிர்கின்றனர். “மார்ஃபிங் செய்யப்பட்ட படம் உண்மையானது போல் தெரிகிறது. இதனால் கடன் வாங்கியோர் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கின்ற னர். மக்கள் கடன் வாங்குவதற்கு லோன் தொடர்பான செயலிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கந்து வட்டிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. அதிகவட்டி வாங்கும் தடை சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
காவல்துறை தவறால் 12 மரணங்கள்
முன்னதாக மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில், காவல்நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடை பெற்றது. கருத்தரங்கில் பேசிய காவல்துறை இயக்குநர், தமிழகத் தில் மட்டும் 84 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 18 காவல் நிலைய மரணங்கள் தமிழகத்தில் நடந் துள்ளன. இது தொடர்பாக 80 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையின் தவறு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்தது. தமிழகத்தில் இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருக் கும்போது உயிர் இழக்கக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும்.