districts

img

மதுரை கப்பலூரில் சிஐடியு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 11-  நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனி யார்மயமாக்கக்கூடாது .நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டை களை உடனடியாக கிட்டங்கிகள், அரிசி ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும். அந்த  இழப்பினை பணியாளர்கள் மீது சுமத் தக்கூடாது.  சுமைப்பணி, துப்புரவுப்பணி டெண்டர் முறையை கைவிட வேண்டும்.  காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  கிட்டங்கியில் உள்ள சுமைதூக்கும் பணி யை  தனியாரிடம் கொடுக்கக்கூடாது. சுமை  தூக்கும் தொழிலாளிக்கு இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்  ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மதுரை கப்பலூர் கிட்டங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.கதிரேசபாண்டியன் தலைமை வகித்தார். மாநிலப் துணைப் பொதுச்செயலாளர் பி.சண்முகம்,சுமை தூக்கும் தொழிலாளி கே.பால்பாண்டி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். மண்டல பொருளாளர் ஆர்.பாஸ்கரன், மாவட்ட நிர்வாகி ஆர்.செல்லமணி மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகி கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட னர்.