districts

img

15 மாதங்களாக குடிநீர் வழங்காமலே நாகமுகுந்தன்குடி ஊராட்சியிடம் குடிநீர் கட்டணம் கேட்பதா?

சிவகங்கை, ஆக.3- சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி ஊராட்சி ஒன்றியம் நாக முகுந்தன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  6 கிராமங்களுக்கு கடந்த 15 மாதங் களாக காவிரி கூட்டுக் குடிநீர்  விநி யோகம் செய்யப்படவில்லை. ஆனால் குடிநீர் வடிகால் வாரியம் அதற்குரிய கட்டணத்தை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின்  தாலுகாச் செயலாளர் ராஜ, மாவட் டக் குழு உறுப்பினர் அழகர்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சந்தி யாகு ஆகியோர் கூறுகையில், நாக முகுந்தன்குடி ஊராட்சியில் 6 கிரா மங்கள் உள்ளன. இந்த கிராம மக்க ளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 15 மாதங்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை.

இது தொடர்பாக விசாரித்த போது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான கட்ட ணத்தை செலுத்துமாறு ஊராட்சி  நிர்வாகத்திற்கு குடிநீர் வடிகால் வாரி யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  விநி யோகிக்காத தண்ணீருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கட்டணம் செலுத்துமாறு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி யது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாகமுகுந்தன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் சுத்தி கரிப்பு மையம் நிறுவப்பட்டு மூன்று ஆண்டுகளாக பயன்படாமல் உள்ளது. பல லட்ச ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஏரா ளமான மனுக்கள் கொடுக்கப்பட்டும்  நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இன்று மக்கள்  ஒரு குடம் தண்ணீரை  12 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் .இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்தினர்.  மாரியம்மாள் என்கிற பெண்மணி கூறுகையில்,  தினம்தோறும் குடி தண்ணீருக்கு பெரும்பாடாக உள்ளது. குடிதண்ணீர் ஒரு குடம் ரூ12.க்கு வாங்கி பயன்படுத்தி வரு கிறோம். குடிநீர் சுத்திகரிப்பு நிலை யம் உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக செயல்படா மல் உள்ளது. இதற்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரி வித்தார்.