மதுரை, டிச.28- தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக நிர்வாகத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர் களை கொண்டு பணியிடங் களை நிரப்பக்கூடாது, நுகர் பொருள் வாணிபக் கழ கத்தில் பணிபுரியும் ஊழியர் களுக்கு பதவி உயர்வு வழங்கி உயர் பதவியில் அமர்த்த வேண்டும். நுகர் பொருள் வாணிபக் கழக ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முயற்சி யை கைவிட வேண்டும். பொது விநியோகத்தை பலப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு நுகர் பொருள் வாணி பக் கழக பொதுத் தொழிலா ளர் சங்கம் சார்பில் மதுரை யில் மண்டல அலுவலகத் தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலச் செயலாளர் எம். அழகு லெட்சுமணன் தலை மை வகித்தார். மாநிலச் செய லாளர் கே.கதிரேசபாண்டி யன் துவக்கவுரையாற்றி னார். கே.பி.எம்.ஜோதிபாசு விளக்கிப் பேசினார். மாநி லப் துணைப் பொதுச் செய லாளர் கே.சண்முகம் நிறை வுரையாற்றினார். மண்டல.பொருளாளர் ஆர்.பாஸ் கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.