districts

img

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் : ஜவாஹிருல்லா பேட்டி

திருநெல்வேலி, ஜன. 2- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று ஜவாஹிருல்லா கூறினார். நெல்லை மேலப்பாளையம் சந்தை ரோட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்டத் தலை வரும் நெல்லை மாநகராட்சி 50-ஆவது வார்டு மான்ற உறுப்பினருமான கே.எஸ்.ரசூல் மைதீன் புதிய அலுவலகம் புத்தாண்டு மாலை திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு ரசூல் மைதீன் தலைமை தாங்கினார், மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வுமான பேராசிரியர் ஜவாஹிருல்லா பாளையங் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் ஆகியோர் திறந்து வைத்தனர், இந்த விழாவில் நெல்லை மாநக ராட்சி மேயர் சரவணன், துணைமேயர்  ராஜு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீ ராம், மதிமுக மாவட்டச் செயலா ளர் கேஎம்.ஏ.நிஜாம், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ் உட்பட  பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவா ஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  சென்னை மாநகராட்சியில் இருப்பது போல நெல்லை மாநகராட்சி அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி சார்பிலே ஒரு வார்டு அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 25 தொகுதிகளை கைப் பற்றும் என அந்த கட்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள். அவர்களது கனவு தமிழகத்தில் பலிக்காது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அந்த கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு நிச்சயம் இடம் இருக்கும். அனைவருடன் அனைவருக்கு மான வளர்ச்சி என்று மோடி சொல்கிறார். ஆனால் அதானி போன்ற தனிநபர் வளர்ச்சி தான் மோடியின் கொள்கையாக உள்ளது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுடைய வளர்ச்சி தான் திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது என்று அவர் கூறினார்.