திருநெல்வேலி, மார்ச்.12- பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபி னர், சிறுபான்மையினர் நலவிடுதி மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா பாளை அண்ணா விளை யாட்டு மைதானத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சீர்மரப்பினர் நல அலு வலர் உஷா தலைமை தாங்கினார். நில எடுப்பு தாசில்தார் பத்ம நாபன், உதவி கணக்கு அலுவலர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் ராஜா, ராணி அண்ணா கல்லூரி உதவி பேராசிரியை இந்திரா, துணை தாசில்தார் விஜய்ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலைத் திருவிழாவில் மாணவ - மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட் டது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 22 அரசு விடுதிகளை சேர்ந்த 65 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.