சிவகங்கை, அக்.26- சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமை யில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் வீரபாண்டி, மாவட்டச் செயலா ளர் மோகன், மாவட்ட பொருளா ளர் விசுவநாதன், பால் உற்பத்தி யாளர் சங்க திருப்புவனம் ஒன்றி யச் செயலாளர் நீலமேகம், காளை யார்கோவில் ஒன்றியச் செயலாளர் சாத்தப்பன், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் சிபிஐ - சந்திரன், திமுக இலக்கிய அணி செயலாளர் அய்யாசாமி, ஆப்ர காம் மற்றும் பலர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்டச் செயலாளர், மாவட்ட பொருளாளர் விசுவநாதன் ஆகியோர் பேசுகை யில், சிவகங்கை மாவட்டத்தில் கரு வேல் மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக பன்றி கள் தொல்லை அதிகமாகி விவ சாயத்தை அழிக்கும் நிலை உள் ளது. காட்டுப் பன்றிகளை கட்டுப் படுத்தவும், பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பேசினர். மேலும், கட்டுப்படுத்துவதற்கு குழு அமைக்கப்படும் என்று மாவ ட்ட ஆட்சித் தலைவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் அதை உரிய காலத்தில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், முதல் வாரத்தில் காட்டுப் பன்றி களை கட்டுப்படுத்துவதற்கு குழு அமைக்கப்படும் என்று தெரிவி தார். காளையார் கோவில் ஒன்றி யச் செயலாளர் சாத்தப்பன் பேசு கையில், சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் ஒரு வர லாற்று சிறப்புமிக்க பகுதியாகும். விடுதலை போராட்டத்திலும் முக் கிய பங்காற்றிய பகுதியாகும். இங்கு பேருந்து நிலையம் அமைத் திடவும், கல்லூரி அமைப்பதற்கும் இடம் தேடுவதாக கூறுகிறார்கள். களையார்கோவில் அருகிலேயே 40 ஏக்கர் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது. அங்கு அரசு கல்லூரி ஏற்படுத்த வேண்டும். காளையார் கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தை சுகாதாரமாக பேணு வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் நீலமேகம் பேசுகை யில், திருப்புவனம் பால் உற்பத்தி யாளர் சங்கத்தில் தொடர்ந்து முறை கேடும், ஊழலும் நடைபெற்று வரு கிறது. உற்பத்தியாளர்களிடம் செய் யப்படுகிற பால் கொள்முதலில் முறைகேடு நடக்கிறது. குறைந்த விலைக்கு வாங்கி, கூடுதல் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு கொடுக்கப்படுவதில்லை. இது தொடர்பாக பலமுறை மனு கொடுத் தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது என்று நீலமேகம் தெரிவித்தார். பார்த்திபனூர் மதகு அணை யில் இருந்து பிரிந்து செல்கிறது இடது பிரதான கால்வாய். அதை தண்ணீர் வழங்குவதில் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பாதிப்படை கிறார்கள். இது தொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை இல்லை. சிவ கங்கை மாவட்ட விவசாயிகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். மழை தண்ணீர் வரும் போது கூட அந்த தண்ணீரை சிவகங்கை மாவட் டத்திற்கு வழங்க மறுக்கிறார்கள். அதற்கு பதிலளித்த அய்யாசாமி, மழை தண்ணீரை எந்த காரணத் தைக் கொண்டும் ஈவு வைத்து இந்த மாவட்டம் அந்த மாவட்டம் என்று பிரித்து வழங்க வேண்டிய அவசி யம் இல்லை. இது திட்டமிட்டு சொல்லப்படுகிறது. இது தொடர் பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதையடுத்து குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார் முன்னதாக விவசாயிகளின் நலன்களுக்காக தொடர்ந்து பாடு பட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட் டச் செயலாளரும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில தலைவர் களில் ஒருவரான ஆர்.கே.தண்டி யப்பன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.