districts

img

ரேசன்கடையில் தரமற்ற அரிசி விநியோகம்: சமயநல்லூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.7- மதுரை மாவட்டம் சமயநல்லூர் ரேசன் கடைகளில் மக்கள் சாப்பிட முடியாத அளவில் புளுத்துப்போன அரிசி விநியோகிப்பதை தடுத்து, நல்ல அரிசி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமயநல்லூரில் வசிக்கும் பொதுமக்களுக்கு மேலக்கால் கூட்டு குடிநீர் தினசரி வழங்க வேண்டும். உடற்பயிற்சி கூடமும், விளையாட்டு மைதானமும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமயநல்லூர் மெயின்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் கிளைச் செயலாளர் சி.இந்திரா தலைமை வகித்தார். 1 ஆவது கிளைச் செயலாளர் பி. நாகேந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சி.மலர்விழி, 2 ஆவது கிளைச் செயலாளர் செல்ல முருகன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பேசினர்.