districts

img

மாணவர்களிடையே தகராறு: படுகாயமடைந்த மாணவர் பலி

திருநெல்வேலி, ஏப்.30- வள்ளியூர், ஆரல்வாய் ்மொழி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவ டைந்த நிலையில் வெள்ளி யன்று அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணை யர் அபய் குமார் ராய் ஆய்வு  செய்தார். ரயில்வே கட்டு மான பிரிவு தலைமை செயல் அதிகாரி பிரபுல்ல வர்மா, ரயில்வே விகஸ் நிகம் முதன்மை திட்ட மேலாளர் சேகர் ரெட்டி, திருவனந்த புரம் ரயில்வே கோட்ட மேலா ளர் முகுந்த் ஆகியோர் உட னிருந்தனர். ஆரல்வாய் மொழியில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சோதனை நடைபெற்றது.  பின்னர் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலா ளர் செய்தியாளரிடம் கூறிய தாவது,  ஆரல்வாய்மொழியில் வள்ளியூர் வரை புதிய ரயில் பாதையில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடந்தது. 110 மற்றும் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  அடுத்த கட்டமாக வள்ளியூர் முதல் நாங்குநேரி, நாங்குநேரி -மேலப்பாளை யம், ஆரல்வாய்மொழி- நாகர்கோவில் என நான்கு கட்ட பணிகள் நடைபெறு கிறது. இந்த பணிகள் 2023 இறுதியில் முடிவடையும் என அவர் கூறினார்.