districts

img

திண்டுக்கல் அருகே பருத்தி செடியில் நோய் தாக்குதலால் பிஞ்சிலேயே உதிரும் காய்கள்

விவசாயிகள் வேதனை  திண்டுக்கல், மே 21- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டி யார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி ஊரில் முழுக்க முழுக்க பருத்தி விவசாயம் நடைபெறுகிறது. இந்த பகுதியை சுற்றியுள்ள கன்னிவாடி, காமாட்சிபுரம், ரெட்டியார்சத்திரம், கதிர்யன் குளம், கசவனம்பட்டி, மயி லாப்பூர், கொட்டப்பட்டி, குட்டத்து  ஆவாரம்பட்டி ஆகிய பல கிராமங்க ளில் சுமார் 1500 ஏக்கர் பகுதிக்கு மேலாக பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர் பருத்தியில் தற்போது சிறு பச்சை பூச்சிகள் தாக்குதல் உள்  ளது. இந்த பச்சை பூச்சிகள் இலை யின் அடிப்பகுதியில் உள்ள தண்டு மற்றும் பருத்திப் பிஞ்சு காம்புப் பகுதி களில் அமர்ந்து சாறுகளை உறிஞ்சி விடுகிறது. இதனால் பருத்தி பிஞ்சுகள் பூக்கும் தருவாயில் உதிர்ந்துவிடு கிறது. இதுதொடர்பாக அப்பகுதி விவ சாயிகள் பலமுறை மருந்துகள் அடித் தும் பச்சை பூச்சிகள் சாவதில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது பருத்தி நல்ல விலை க்கு விற்கப்படுகிறது. முப்பது ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பருத்தி தற்போது 120 ரூபாய் வரை விற் கப்படுகிறது. இந்நிலையில் இந்தப்  பூச்சி தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவ சாயத்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர்.